tamilnadu

img

செய்தித்துறை அமைச்சருடன் டியுஜே நிர்வாகிகள் சந்திப்பு

தமிழகத்தில் பெரும் எண்ணிக்கையில் பணிபுரிந்து வரும் ஊரக பத்திரிகையாளர்களை நலவாரியத்தில் உறுப்பினர்களாக இணைக்க வேண்டும்; ஓய்வூதியம் பெற விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் தளர்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பத்திரிகையாளர்களின் நலனை முன்னிட்டு நடப்பு பட்ஜெட் மானியக் கோரிக்கை விவாதத்தின்போதே தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (டியுஜே) மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள் பி.சண்முகவேல், பி.ஆர்.வேளாங்கண், எஸ்.பி.தேவேந்திரன் ஆகியோர் திங்களன்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.