அருமனை, அக்.26 - கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் பால் வடிக்கும் தொழிலாளர்கள், விவ சாயிகளின் வாழ்வாதாரம்தொடர் மழை யால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தின் வட-மேற்கு பகுதிகளில் முக்கிய தொழில் ரப்பர் பால் வடிப்பு. மலையோர பகுதியை உள்ளடக்கி விளவங்கோடு, கல்குளம், திரு வட்டார் ஆகிய தாலுகாக்களில் அதிக அளவில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் அரசு ரப்பர் கழகம், தனியார் ரப்பர் தோட்டம், சிறு, குறு ரப்பர் விவ சாயிகள் என பல்வேறு தரப்பில் உள்ள ரப்பர் பால் வடிக்கின்ற தொழிலாளிகளும் உடைமையாளர்களான விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் கோடைகாலம் முடிந்து நான்கு மாதங்கள் ஆகியும் பால்வடிக்கும் தொழில் துவங்காத தோட்டங்கள் உள்ளன. தோட்டங்களில் கால பருவ நிலை சரியில்லாமல் பால் வடிக்கும் தொழில் தொடங்கி சில நாட்களில் நிறுத்தி விட்டனர். அதன்பிறகு தற்போது ஒன்றரை மாத காலமாக மலையோர பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் பால் வடிக்கும் தொழில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத னால் இதரத் தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ரப்பர் தொழிலாளிகள் அதை சார்ந்து வரக்கூடிய தொழில் செய்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரப்பருக்கு போதுமான விலை கிடைக்காததும் பாதிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. வர்த்தகம் பாதிப்பு பெருமளவில் ரப்பர் ஏற்றுமதி செய்யக்கூடிய ஒரு பகுதியாக குலசேகரம் திகழ்ந்து வருகிறது. மூன்று தாலுகா பகுதி களிலும் கிராமம் தோறும் சிறு குறு ரப்பர் கொள்முதல் கடைகள் வைத்து வியாபாரம் செய்யும் வர்த்தகர்களும் அதை கொள் முதல் செய்யும் நடுத்தர வியாபாரிகளும், அதை சார்ந்த வர்த்தகர்களும் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வியாபாரிகள் கையில் பணம் இல்லாமல் ரப்பர் கொள்முதல் செய்ய முடியாமல் திணறி திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். தொழிலாளர்கள், விவசாயிகள், வியா பாரிகள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக தெரிவிக்கும் இவர்கள் வட்டிக் கடன் வாங்கி குடும்பச்செலவுகள் நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.