tamilnadu

இலங்கைக்கு முதல் தவணையாக ரூ.8 கோடி மதிப்புள்ள மருந்துகள் தயார்

சென்னை, மே 15- தமிழக அரசின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவ அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்கள், மருந்து வகைகள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி பொருட்களை பண்டல் போடும் பணிகள் நடந்து வருகின்றன. மருந்து பொருட்கள் அண்ணா நகரில் உள்ள மருந்து கிடங்கில் பண்டல் போடப்பட்டு தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது. அதை அமைச்சர் மா.சுப்பிர மணியன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று  நேரில் பார்வையிட்டனர்.  பின்னர் மா.சுப்பிர மணியன் கூறியதாவது:- ‘‘பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசின் சார்பில் உதவிகள் வழங்கப்படும் என  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட மன்றத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இலங்கைக்கு தமிழக அரசின் சார்பில் அரிசி, பால் பவுடர் மற்றும்  ரூ.28 கோடி மதிப்பிலான மருந்து பொருட் களை வழங்குவதற்கான ஆணைகள் பெறப்பட்டு, தமிழ்நாடு மருத்துவப் பணிகள்  கழகம் அதற்கான பணிகளை செய்து வருகிறது. 137 வகையான அத்தியாவசிய மருந்து கள், சிறப்பு மருந்துகள் மற்றும் அறுவை  சிகிச்சை பொருட்களை ரூ.28 கோடி மதிப்பில் வழங்க நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டு உள்ளது. முதல் தவணையாக அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 2 சிறப்பு மருந்துகள் ரூ.8 கோடியே 87 லட்சத்து 90 ஆயிரத்து 593 மதிப்பில் வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மருந்துகள் (36 அத்தி யாவசிய மருந்துகள், 39 சிறப்பு மருந்து கள்) கொள்முதல் செய்யப்பட்டு 2-ம் தவணையாக வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

;