தஞ்சாவூர், மே 3- தஞ்சாவூர் மாவட்டத் தில், ஜூன் மாதம் பாசனத் திற்காக மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படு கிறது. இதனால், டெல்டா மாவட்டம் முழுவதும் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட் டில் தூர் வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரு கின்றன. இந்நிலையில், தஞ்சா வூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட் பட்ட செங்கமங்கலம் கிரா மத்தில் அம்புலி ஆற்றில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வடிகால் வாய்க்கால், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தூர்வா ரும் பணி தொடங்கியது. இதேபோல் சித்தாதிக் காடு நெல்லியடிக்காடு பகுதி அம்புலி ஆற்றில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு பணிகளையும் பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.