சென்னை,ஜன.13- 2021ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான “தந்தை பெரியார் விருது’’ திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத் தாளருமான க.திருநாவுக்கரசுக்கும் “டாக்டர் அம்பேத்கர் விருது’’ சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துருவுக்கும் வழங்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த விருதாளர்களுக்கு விரு துத் தொகையாக தற்போது வழங்கப் பட்டு வரும் ஒரு லட்சம் ரூபாய் என்பதை இவ்வாண்டு முதல் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்விருதுகள், விருதுத் தொ கையுடன், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரையுடன் வழங்கப்படும். ஜனவரி 15 சனிக்கிழமை திருவள்ளு வர் தினத்தன்று தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்விருது களை வழங்குகிறார். “திராவிட இயக்கத்தின் நட மாடும் கலைக்களஞ்சியம்’’ என அழைக்கப்படும் க.திருநாவுக்கரசு “நீதிக்கட்சி வரலாறு’’ திராவிட இயக்க வேர்கள், திராவிட இயக் கத் தூண்கள் போன்ற பல்வேறு வரலாற்று நூல்களை எழுதி யுள்ளார். முன்னாள் நீதிபதி கே.சந்துரு, தன்னுடைய பணிக்காலத்தில் 96 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு கண்டு சாதனை படைத்தவர். வழக்கறிஞராகப் பணியாற்றும் போது, ஏழை எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்காக வாதாடி யவர். இவர் அளித்த பல்வேறு தீர்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் காப்பதாக அமைந்திருந்தது. ‘அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்பு கள்’, என் வழக்கை கவனி!: ‘தமிழ் நாட்டில் ஒரு பெண் நீதிமன்றத்தை அணுகும்போது’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.