tamilnadu

img

சிறுமி டானியாவுக்கு வீட்டுமனைப் பட்டா

சென்னை,ஜூன் 30- முகச் சிதைவு நோயால் பாதிக்கப் பட்டு மாநில அரசின் உதவியுடன் சிகிச்சை பெற்றுக் குணமான சிறுமிக்கு வீடு கட்டிக்கொள்ள அனுமதி  ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், மோரை பகுதியைச்  சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்கி யம் தம்பதியரின் 9 வயது மகள்  டானியாவுக்கு மாநில அரசின் உதவி யுடன் தனியார் மருத்துவமனையில் இரண்டு முறை முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது நலமுடன் உள்ள  அந்த சிறுமியின் குடும்ப ஏழ்மை நிலை கருதி முதல்வர் திருவள்ளூரில் ஒரு நிகழ்ச்சிக்காக செல்லும் போது அவரது  இல்லத்திற்கு நேரில் சென்று,  அச்சிறுமியை சந்தித்து நலம் விசாரித்து, மாநில அரசின் சார்பில் தேவை யான உதவிகள் செய்து தரப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக டானியா குடும்பத்திற்கு திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், பாக்கம் கிராமத்தில் ரூ.1.48 லட்சம் மதிப்புள்ள நிலத்திற்கான வீட்டுமனைப் பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட  மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின்  கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணையை வெள்ளியன்று தலைமை செயல கத்தில் டானியா பெற்றோரிடம் முதல்வர் வழங்கினார். இந்நிகழ்வின் போது, சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் மற்றும் பலர் உடனிருந்தனர்.