குழந்தைகளை துரத்திக் கடித்த நாய்கள்
சேலம், ஜூன் 11- எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில், வீதியில் செல்லும் குழந்தைகளை நாய்கள் துரத்திக் கடித்த சம்பவம் குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சி, கவுண்டம்பட்டி பகுதியில், வீட்டில் வளர்க் கும் நாய்கள், வெறிபிடித்து வீதியில் செல்லும் குழந்தைகளை விரட்டி விரட்டி கடித்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆறு முகம் என்பவர் எடப்பாடி காவல் நிலை யத்தில் புகார் அளித்த நிலையில், நாய்களை வீட்டில் கட்டி போட்டு வளர்க்க வேண்டும், என போலீசார் அறிவுறுத்தினர். ஆனாலும், அந்த நாய்களை கட்டி போட்டு வளர்க்காததால், வீதியில் செல்லும் குழந்தைகளை விரட்டி விரட்டி கடித்துள்ளது. இதனை தட்டிக்கேட்ட ஆறுமுகம் என்பவரை, நாய்க்கு சொந்தக் காரர்கள் தாக்கியதால், எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டுள்ளார். எனவே, இதுகுறித்து எடப்பாடி காவல் துறை மற்றும் நக ராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரி வித்துள்ளனர். தற்போது, குழந்தைகளை நாய்கள் துரத்தி கடிக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளத்தில் வைர லாகி வருகிறது.