tamilnadu

img

நொச்சிச் செடி கொசுவை ஒழிக்குமா? - ஸ்ரீராமுலு

 “வீடுகளில் மிக முக்கியத் தொல்லையாக அமைவது கொசுக்கள் தான். எத்தனை விதமான முயற்சிகளுக்கும் ஈடு கொடுக்கும் இந்த கொசுக்களை விரட்ட பொதுமக்கள் கடுமையாக போராட வேண்டியுள்ளது. ரசாயன லிக்விட், கொசு அடிக்கும் மின்சார ‘பேட்’. கொசு வலை என கொசுக்களை விரட்டும் உபகரணங்களுக்கு மட்டும் ஒவ்வொரு மாதமும், அதிகமாக செலவிடுகின்றனர். ஆகவே, கொசுக்களை விரட்ட தமிழகம் முழுவதும் இல்லந்தோறும் நொச்சிச் செடிகளை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது”

என்று அண்மைய அரசு செய்திக் குறிப்பு கூறியது.

இது சாத்தியமா?  மூன்றாண்டுகளுக்கு முன்பு நொச்சிச் செடிகளை நிறைய வளர்க்கப் போவதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.  அதன் தொடர் நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும்  கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பம் ஒன்றுக்கு தலா இரண்டு நொச்சி செடிகள் வீதம் 50 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிமுக அரசு சட்டப்பேரவையில் அறிவித்தது. இதற்காக, பொள்ளாச்சி அருகே ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திலும் சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சியிலும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களைக் கொண்டு நாற்றங்கால் அமைத்து நொச்சி செடிகளை வளர்க்கும் பணியைத் துவக்கினர். நொச்சிச் செடிகளை வளர்ப்பதன் மூலம் கொசுவை விரட்ட முடியும் என்பது முற்றிலும் அறிவியலுக்கு விரோதமானது. நொச்சிச் செடி வீடுகளில் வளர்க்க மிகவும் ஏதுவாக இருக்கும். இவற்றை கால்நடைகள் உண்ணாது. கிராமப்புறங்களில் வயல் வெளிகளிலும், வாய்க்கால், வரப்பு ஓரங்களிலும் இந்த மூலிகை செடியை அதிகமாக காணலாம்.  எளிதில் எல்லா இடங்களிலும் வளரும் தன்மை கொண்ட நொச்சி இலை, கொசுவை விரட்டும் தன்மை படைத்தது என்று கூறுவதில் துளியளவும் உண்மை இல்லை. அதுமட்டும் அல்லாமல் காய்ந்த அல்லது பச்சை நொச்சி இலையோடு வேப்பிலை கலந்து எரித்து புகையை விட்டாலும் வீட்டில் கொசுவை ஒழிக்க முடியாது. வேண்டுமானால் விரட்டலாம். கொசுவை ஒழிப்பதாக தனியார் நிறுவனங்களால் அறிமுகம் செய்யப்பட்ட ‘குட் நைட்’ சுருளால் மயக்கமடைந்தன. பிறகு, பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களால் ரசாயனம் அதிகம் கலந்து ‘லிக்யூட்’ அறிமுகமானது. அதற்கும் பலன் கிடைக்கவில்லை. அது தனது வீரியத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்றும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்ட நொச்சிச் செடி வெப்பத் தன்மையுடையது. இவை உடல் அசதியைத் தணிக்கும், காய்ச்சலைப் போக்கும்,  ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்தும். வயிற்றுப் புழுக்களைக் கொல்லும் புற மருத்துவமாக பயன்படுத்தப்படுகிறது என்கிறார் சித்த மருத்துவத்தின் மூத்த மருத்துவப் பேராசிரியர் ஒருவர். ஒரு ரசாயனம் பயன்படுத்துவதால் சருமம், கண்கள், நுரையீரலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒரு கொசுவர்த்தி சுருள் எரியும் பொழுது அதில் வெளிப்படும் சாம்பலின் அளவு 75 முதல் 135 சிகரெட் எரிப்பதனால் வரும் சாம்பலுக்கு சமம் என்றும் கேடுகள் விளைவிக்கும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்கின்றனர் அனுபவம் வாய்ந்த அரசு மருத்துவர்கள்.