2012ஆம் ஆண்டு ஜூலை 10ந் தேதி அன்றைய பாஜக அரசு அங்கன்வாடி மையங்களை தனியார்மயமாக்க சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கான நிதியை ஆண்டுதோறும் குறைத்து படிப்படியாக தனியார்மயமாக்கி வருகிறது. எனவே இந்த நாளை அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு தினமாக அனுசரித்து இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.டெய்சி, நிர்வாகிகள் பி.மணிமேகலை, எஸ்.ஹேமபிரியா உள்ளிட்டோர் பேசினர்.