tamilnadu

img

அமெரிக்க நிதியுதவி வேண்டாம் நேபாள மக்கள் போர்க்கொடி

காத்மண்டு, பிப்.25- மக்களின் கடுமையான எதிர்ப்பால், அமெரிக்காவி டமிருந்து கிடைக்கவிருக்கும் நிதியுதவி பற்றிய விவா தத்தை நேபாள நாடாளுமன்றம் தள்ளி வைத்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அரசு உதவி நிறுவனம் ஒன்று, நேபாளத்திற்கு 50 கோடி அமெரிக்கா டாலர் உதவியைச் செய்வதாக ஒப்புக் கொண்டது. இந்த நிதியுதவியைக் கொண்டு மின் விநியோகம் மற்றும் சாலைகளை மேம்படுத்தும் திட்டங்களை மேற் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது. இந்த நிதியைத் திரும்பத் தர வேண்டியதில்லை என்றும், வேறு எந்த நிபந்த னைகள் எதுவும் இல்லை என்றும் அந்த நிறுவனம் கூறியிருந்தது.

ஆனால், நிதியுதவி என்ற பெயரில் தங்கள் திட்டங்க ளை நேபாளத்தின் மீது திணிக்கிறார்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிதியுதவியைப் பெற்றுக் கொள்ள நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படுகிறது. ஒப்புதலைத் தருவதா வேண்டாமா என்று முடிவு செய்ய நடைபெறவிருந்த விவாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களின் கடுமையான எதிர்ப்பே தள்ளி வைக்கும் முடிவை எடுப்பதற்கான காரணமாக உள்ளது. இந்த நிதியுதவியை நேபாளம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா தனது தூதரகம் மூலமாகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. இது அமெரிக்க மக்களின் பரிசு என்றும், இரு நாடுகளின் ஒற்றுமைக்கு இது பெருமளவில் உதவும் என்று தூதரகம் கூறியுள்ளது. தங்கள் நாட்டின் உள்விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று இதற்கு நேபாள அமைப்புகள் பதிலடி கொடுத்துள் ளன. நேபாளத்திற்கு எது தேவை என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

புதனன்று நடந்த போராட்டத்தில் தலைநகர் காத்மண்டு வின் வீதிகள் நிறைந்து காணப்பட்டன. ஆயிரக்கணக் கான மக்கள் அமெரிக்க எதிர்ப்பு முழக்கங்களுடன் போராட்ட ஊர்வலத்தில் பங்கேற்றனர். போராட்டக்காரர் கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கலைக்க காவல்துறையினர் முயற்சி செய்தனர். இதில் பலர் காயமடைந்தனர். நிலைமை பதற்றமாக இருக்கிறது என்று அரசுத்தரப்பு செய்திகள் கூறுகின்றன. பேச்சுவார்த்தைக் கான முயற்சிகளும் நடக்கின்றன.