tamilnadu

img

காட்பாடியில் தமுஎகச ஆர்ப்பாட்டம்

காட்பாடியில் தமுஎகச ஆர்ப்பாட்டம் '

தமிழர் பண்பாட்டின் அடையாளமான கீழடி ஆய்வறிக்கையை உள்ளபடியே வெளியிடக் கோரி ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட குழுக்கள் சார்பில் காட்பாடியில் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீராம் தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதனை வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பெ.திலீபன் துவக்கி வைத்து பேச, தமுஎகச மேனாள் மாவட்ட தலைவர் முல்லைவாசன் நிறைவு செய்து பேசினார். தமுஎகச வேலூர் மாவட்ட தலைவர் சகுவரதன், மாவட்ட செயலாளர் சுரேந்திரன், தமுஎகச ராணிப்பேட்டை மாவட்ட துணைத்தலைவர் த.ரஜினி,  தமிழக தமிழாசிரியர் சங்க மாநில துணை செயலாளர் வா.ரா, வாலிபர் சங்க வேலூர் மாவட்ட செயலாளர் சூர்யா ஆகியோர் பேசினர். முடிவில் மாணவர் சங்க உறுப்பினர் அகமதுஅலி நன்றி கூறினார். முன்னதாக பறையிசை முழங்கி போராட்டம் துவங்கியது. மேலும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.