திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார்!
முதலமைச்சர் இரங்கல்
சென்னை, அக். 23 - நாமக்கல் மாவட்டம், சேந்த மங்கலம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி (74) வியாழக்கிழமை காலமானார். கொல்லிமலையில் உள்ள அவரது வீட்டில் திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், முதலில் அரசு மருத்துவமனைக்கும், பின்னர், நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்து வர்கள், பொன்னுசாமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள் ளனர். பொன்னுசாமி, ஏற்கெனவே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது அரசியல் வாழ்க்கையை அதிமுக-வில் தொடங்கிய பொன்னு சாமி, பின்னர் திமுக-வில் இணைந் தார். சேந்தமங்கலம் (பழங்குடி யினர்) சட்டமன்றத் தொகுதியில் 2006 மற்றும் 2021 என இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். முதல்வர் இரங்கல் இந்நிலையில், அவரது மறை வுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரி வித்துள்ளார். “தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்று இரண்டு முறை அவர்களது பிரதிநிதியாகச் சட்ட மன்றத்தில் மக்கள் பணி ஆற்றிய பொன்னுசாமியின் மறைவு அத்தொ குதி மக்களுக்கு பேரிழப்பு. நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளராகக் கழகத்தை வளர்த்ததோடு, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அயராது பாடுபட்டவர். அவரது மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் சேந்தமங்கலம் தொகுதி மக்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனை வருக்கும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன்” என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
