டியூ.ஜே. மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டு தியாகம் புரிந்த தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், இடதுசாரி தலைவர்கள் தலைமை தாங்கி நடத்திய வீரம் தமிழக தொழிலாளர்கள், விவசாயி களின்போராட்ட வரலாற்றை இளம் தலைமுறையினர் அறிந்துக் கொள்ளும் வண்ணம், அதனை ஆவண படுத்திய தோழர் என். ராமகிருஷ்ணன் மறைந்தார் என்ற செய்தி, அதிர்ச்சியையும் பெரும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தோழர் என்.ராமகிருஷ்ணன் தமிழக த்தின் வாழும் வரலாறு, நூற்றாண்டைக் கண்ட சுதந்திர போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யாவின் சகோதரர் ஆவார். இவர் மதுரையில் வசித்து வந்தார். தனது மகளின் வீட்டில் தங்கி இருந்த போது, டிச.12 அன்று அவருடைய துயரமான மறைவு நிகழ்ந்துள்ளது. தோழர் என்.எஸ், அவரது குடும்பத்தி ற்கும், என்.ஆர், மகள், மகன் குடும்பத்தி னருக்கும், சிபிஎம் தோழர்களுக்கும், தீக்கதிர் தோழர்களுக்கும் டி.யூ.ஜே. தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. தனது சிறு வயது முதல் மறைவு வரைக்கும் ஜனசக்தி, தீக்கதிர், உள்ளிட்ட நாளேடுகளில் கட்டுரையாளராக, எழுத்தா ளராக, பணிபுரிந்தவர். ஜனசக்தியில் பணி புரிந்தபோது அரசின் அடக்கு முறைக்கு ஆளாகி, 2 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். தமிழில் 76 நூல்களையும், ஆங்கிலத்தில் 10 நூல்களையும்,மேலும் 25 மேற்பட்ட நூல்களை மொழியாக்கங்களை செய்துள்ளார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் இடதுசாரி இயக்கங்கள் குறித்த வரலாற்று ஆய்வாளராக, இன்றைய இளம் தலைமுறையினருக்கு பல்வேறு வரலாற்று பொக்கிஷங்களை உருவாக்கித் தந்த தோழர் என். ராமகிருஷ்ணனுக்கு டி.யூ.ஜே. சார்பில் மீண்டும் எனது கண்ணீர் அஞ்சலி யையும்,செவ்வணக்கத்தையும், தெரி வித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.