tamilnadu

வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்திகள் விநியோகித்த அதிமுகவினர் கைது

திருவள்ளூர்,பிப்.20- திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 3 ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் சுமித்ரா வெங்கடேசனின் ஆதரவாளர்கள் பிப்ரவரி 19 அன்று வீடு, வீடாகச் சென்று  வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்திகள் வழங்கினர்.  இதுகுறித்து தகவலறிந்த திரு வள்ளூர்  போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் நகர காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் மற்றும் போலீசார் விரைந்து சென்று சோதனையிட்டனர்.. அப்போது, வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்திகளை வழங்கி வந்த பாரி,  ராகுல் ஆகியோரை கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து தங்க மூக்குத்திகளை யும் பறிமுதல் செய்தனர்.