tamilnadu

தெற்குதிட்டை ஊரட்சி செயலர் பணியிடை நீக்கம் ... ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் எதிர்ப்பு....

மதுரை:
கடலூர் மாவட்டம் தெற்குதிட்டை ஊராட்சி செயலாளராகப் பணிபுரியும்  சிந்துஜா அரசியல் காரணங்களால் பழிவாங்கப்பட்டு கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும்குற்றமிழைத்தவர்களை  தண்டிப்பதற்குப் பதிலாக ஊராட்சி செயலாளரை பொறுப்பாக்கி அவரை பணியிடை நீக்கம் செய்ததையும், அவர் மீது அடிப்படை  முகாந்திரமின்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துகைது செய்ததையும் கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம்சார்பில் மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின மதுரை மாவட்டச் செயலாளர் அ.பாலாஜி  மாநிலப் பொருளாளர் மா.விஜயபாஸ்கர், மாவட்டத் தலைவர்சந்திரசேகர், தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்க மதுரை மாவட்டப் பொருளாளர் ராம்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இராஜபாளையம்
இராஜ ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 36 ஊராட்சிகளில் பணியாற்றும் பெண் செயலர்கள் உட்பட 30-க்கும்மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், “பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெறும் பெண் ஊராட்சி தலைவர்களுக்கு பதிலாக, கணவர்கள், உறவினர்கள்செயலர்களை மிரட்டுவதைக் கண்டித்தும், எதிர்த்துக் கேட்டால் பொய் வழக்கு பதிவுசெய்வதை கண்டித்தும் பணிப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் தெற்குத்திட்டை ஊராட்சி செயலர் சிந்துஜா என்பவர் மீதுபதியப்பட்ட வன்கொடுமை வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங் களை எழுப்பினர்.