tamilnadu

img

சேதுபாவாசத்திரம் கடற்கரை மணல் திட்டில் அம்மன் சிலை கண்டெடுப்பு

பேராவூரணி, மே14 -  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபா வாசத்திரம் மீனவர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரெங்கநா தன். இவர் சனிக்கிழமை காலை  சுமார் ஏழு மணியளவில் தனது  படகு அருகே சென்ற போது, மண லில் சிலை ஒன்று இருப்பதைப் பார்த்தார். அந்தச் சிலையை சக மீன வர்கள் உதவியுடன், மண்ணில் இருந்து தோண்டி எடுத்தார். இது  சுமார் மூன்று அடி உயரம் உள்ள பீடத்துடன் கூடிய அம்மன் கற் சிலை என்பது தெரியவந்தது. இது குறித்து சேதுபாவாசத்திரம் கட லோர காவல் படைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில்,  அவர்கள் சிலையை மீட்டு பேராவூரணி வட்டாட்சியர் சுகுமாரிடம்,  குருவிக்கரம்பை சரக  வருவாய் ஆய்வாளர் வெற்றிச்செல்வி, கிராம நிர்வாக அலு வலர் அருண் பிரகாஷ் மூலம் பாதுகாப்பாக ஒப்படைத்த னர்.