tamilnadu

மார்க்சிய அறிவுலகிற்கு பேரிழப்பு முதல்வர் இரங்கல்

சென்னை,டிச.13- முதுபெரும் தோழர் என். ராமகிருஷ்ணன் மறைவுக்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை வருமாறு:- தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும், An Outline History of the Communist Movement of the World போன்ற பல தலைசிறந்த இடதுசாரி இயக்க வரலாற்று நூல்களை எழுதிய தோழர் என். ராமகிருஷ்ணன் அவர்கள் திடீரென்று மறைவெய்தினார் என்ற வேதனைமிகு செய்தி அறிந்து மிகுந்த துயரத்திற்கு உள்ளானேன். தோழர். என்.ஆர். எனப் பொதுவுடைமை இயக்கத்தி னரால் அன்புடன் அழைக்கப்பெறும் இவர், அண்மை யில் தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற தியாகி சங்கரய்யாவின் சகோதரரும் ஆவார். பொதுவுடைமைக் கொள்கைகளையும்- அவ்வி யக்கத்தின் வரலாற்றையும் கடைக்கோடிக்கும் கொண்டு சேர்க்கும் பணியைத் தன் வாழ்நாள் கடமையாகவே மேற்கொண்ட எழுத்தாளராக விளங்கிய அவரது மறைவு மார்க்சிய அறிவுலகிற்குப் பேரிழப்பாகும். தோழர் என்.ஆர். அவர்களை இழந்து வாடும் அவ ரது அவரது சகோதரர் தோழர் என். சங்கரய்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும் பொதுவு டைமை இயக்கத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கி றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.