tamilnadu

img

உலகத்தின் தமிழ் முகமாக தமிழ்ப் பல்கலைக்கழகம் திகழ்கிறது

தஞ்சாவூர், செப்.5-  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையில் தமிழ்ப் பல்கலைக்கழகம், ‘‘தமிழ்ச் செம்மொழி இலக்கிய இலக்கண நூல்களின் மொழிபெயர்ப்புகள்’’ என்னும் பொருண்மையில் புத்தொ ளிப் பயிற்சியினை கடந்த 19.8.2024 முதல் 4.9.2024 வரை (பதினான்கு நாட்கள்) நடத்தியது. இதன் நிறைவு விழாவில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் இரா. சந்திரசேகரன் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு பங்கேற்பாளர் களுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசினார். அவர் பேசுகையில், ‘‘உலகமொழியாக விளங்கும் தமிழ்மொழிக்காக உருவாக்கப் பட்டிருக்கும் தமிழ்ப் பல்கலைக்கழ கம், உலகத்தின் தமிழ் முகமாகத் திகழத் தொடங்கி இருப்பதாகவும், தமிழ் இலக்கிய, இலக்கணம் தொடர் பான புத்தொளிப் பயிற்சிகளைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் நிகழ்த்து வதற்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் உறுதுணையாக இருக்கும்’’ என்றார்.  தமிழகத்தின் கல்லூரி மற்றும் வெவ்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்து 33 பேராசிரியர்கள் இப்பயிற்சி யில் பங்கேற்பாளராகப் பங்கேற்ற னர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருதம், அரபு, உருது, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ள சங்க இலக்கியம், இலக்க ணம் தொடர்பான உரைகளை இந்தியா வின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த  துறைசார்ந்த ஆளுமைகள் வழங்கி னர். தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் பா.ராஜேஷ் புத்தொளிப் பயிற்சி குறித்த அறிக்கையைச் சமர்ப் பித்தார். தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வி.திரு வள்ளுவன், பல்கலைக்கழகப் பதிவா ளர் சி.தியாகராஜன் ஆகியோர் பேசி னர். இப்புத்தொளிப் பயிற்சிப் பயி லரங்கம் குறித்த பின்னூட்டங்களைப் பங்கேற்ற பேராசிரியர்கள் வழங்கினர்.  வளர்தமிழ்ப் புல முதன்மையர் இரா.குறிஞ்சிவேந்தன் வரவேற்றார். மனிதவள மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் ஒருங்கிணைப்பாளர் ப.ராஜேஷ் நன்றி கூறினார்.