tamilnadu

img

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்

சென்னை, செப்.8- பிரபல இயக்குநர், நடி கர் மாரிமுத்து வெள்ளியன்று (செப்.8) காலை மாரடைப் பால் காலமானார். அவருக்கு  வயது 57. அவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள் ளது. பகுத்தறிவு சிந்தனை யாளரும், ‘ஜெயிலர்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகருமான மாரிமுத்து வெள்ளிக் கிழமை (செப்.8) தனி யார் தொலைக்காட்சி தொடரான ‘எதிர் நீச்சல்’ சீரியலுக்கு டப்பிங் பேசிக்  கொண்டிருந்த போது, திடீ ரென மயங்கி கீழே விழுந்த நிலையில், உடனடியாக அருகில் இருந்த சூர்யா மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்ற னர். நடிகர் மாரி முத்துவை  பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக உறுதி செய்துள்ளனர். நடிகர், இயக்குநர் மாரி முத்துவின் திடீர் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சி யடைய செய்துள்ளது. முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சக்கரபாணி, கவி ஞர் வைரமுத்து,கி.வீரமணி  திரைக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல்  தெரிவித்துள்ளனர். நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சொந்த ஊரான தேனி வருச நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.