மதுரை:
அனைத்து டிப்ளமோ மாணவர்களின் நலன் கருதி, அவர்களின் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒருமுறை காலஅவகாசம் வழங்க வேண்டும். தேர்வு எழுதஅனுமதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த தேவதுரை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தமனு: “நான் புதுக்கோட்டை தெரசா பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டட கலைப் பிரிவில் டிப்ளமோ படித்து வருகிறேன். நான்பருவத் தேர்வில் சில பாடங்களில் தோல்விஅடைந்ததால், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்திருந்தேன் கொரோனா ஊரடங்கால் முடிவு தாமதமாகியது. இந்த நிலையில் அரியர் தேர்வு எழுதுவதற்கான, தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் முடிந்து விட்டது. எனவே, எனக்கு அரியர் தேர்வு எழுத அனுமதி வழங்க உரியஉத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை செவ்வாயன்று விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு. மாணவர், பருவத் தேர்வில் தோல்வியடைந்த பாடங்களில் மறு மதிப் பீட்டிற்கு விண்ணப்பித்துள்ளார். மறு மதிப்பீடு முடிவு வருவதற்கு முன்பாகவே அரியர்தேர்வு எழுதுவதற்கான தேர்வு கட்டணம் செலுத்தும் கால அவகாசம் முடிந்து விட்டது. ஆனால் மறு மதிப்பீடு முடிவில் தேர்வில்தோல்வி அடைந்தது உறுதி செய்யப்பட்டவுடன், தேர்வுக் கட்டணம் செலுத்த நிர்வாகத்தை நாடியுள்ளார். ஆனால் தேர்வுக் கட்ட
ணம் செலுத்த கால அவகாசம் முடிந்து விட்டதால் அனுமதிக்க வில்லை. மறு மதிப்பீடு முடிவுக்காக காத்திருந்ததால், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அரியர் பாடத் திற்கான தேர்வு கட்டணம் செலுத்தவில்லை. மாணவரின் நலன் கருதி அரியர் பாடங்களுக்கான, தேர்வுக் கட்டணம் செலுத்த மேலும் ஒரு கடைசி வாய்ப்பு வழங்க வேண்டும். மனுதாரருக்கு மட்டும் அல்ல. அனைத்து மாணவர்களின் நலன் கருதி, இதேபோன்ற நிலையில் உள்ள மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு முறை கால அவகாசம் வழங்க வேண்டும். அம் மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இவ்வாறு, அரியர் மாணவர்களுக்கு, தேர்வு கட்டணம் செலுத்தவும், தேர்வு எழுதவும் ஒரு வாய்ப்பு வழங்கினால், இது இதற்குமுன் கொரோனாவால் தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் “தேர்ச்சி” என்ற அறிவிப்பைக் காட்டிலும் சிறப்பாக இருக்கும். என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.