tamilnadu

திண்டுக்கல் மற்றும் சிவகங்கை முக்கிய செய்திகள்

தோழர் ப.சண்முகம் மறைவுக்கு இரங்கல்

திண்டுக்கல், ஜூன் 1 தோழர் ப.சண்முகம் மறை வுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சம்மேளனமாநில பொது செயலா ளர் கே.ஆர் .கணேசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியி ருப்பதாவது:  புதுக்கோட்டை மாவட்ட கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரும் உள்ளாட்சி ஊழியர் சம்மேளனத்தின் ஸ்தாபக தலை வர்களில் ஒருவருமான தோழர் ப. சண்முகம் கடந்த 30-5-20 அன்று கால மாகிவிட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.  தோழர்கள் எஸ்.ஏ. தங்க ராஜன், வி.கே.கோதண்டராமன் ஆகியோருடன் சேர்ந்து தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரி யும் துப்புரவு தொழிலாளர்களை திரட்டி சிஐடியு சங்கத்தில் ஸ்தல ஸ்தாபன ஊழியர் சங்கத்தை உரு வாக்கியதில் முக்கிய பங்காற்றி யவர். பல பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றியவர். இறுதிவரை துப்புரவு பணியாளர்களையும் ஊராட்சிகளில் உள்ள ஓஎச்டி ஆபரேட்டர்களையும் திரட்டுவதில் சளைக்காமல் பணியாற்றி வந்தார். அவரது இழப்பு அவரது குடும்பத் திற்கு மட்டுமல்லாமல் உள்ளாட்சி ஊழியர் சம்மேளனத்திற்கு பேரி ழப்பாகும். இவ்வாறு அவர் கூறி யுள்ளார். 

போலி பட்டாக்களை ரத்து செய்ய சிவகங்கை ஆட்சியர் உத்தரவு

சிவகங்கை, ஜூன்1- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அரசனேந்தல் தலித் மக்கள் நில பட்டாவை வேறு பெயருக்கு மாற்றம் செய்ததை ரத்து செய்து தலித் மக்களின் பெயருக்கே பட்டாவை மாற்ற மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை அரசனேந்தல் கிரா மத்தைச் சேர்ந்தவர் தலித் முத்து. இவருக்கு அரசனேந்தலில் உள்ள 55 சென்ட் நிலத்தை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல்  விவசாயம் செய்து அனுபவித்து வருகிறார். இந்த நிலை யில் முத்து உள்ளிட்ட பத்து தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் நிலங்களை நில உடமை தாரர்களுக்கே தெரியாமல் சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டாமாற் றம் செய்துள்ளனர். பட்டா மாற்றம் செய்ததே தெரியாமால் விவசாயிகள் விவசாயம் செய்துவருகின்றனர்.  விவசாயிகளுக்கே தெரியாமல் 16 முறை விசாரணை நடந்ததாக ஆவணம் தயார் செய்து மோசடியாக பட்டா மாறுதல் செய் துள்ளனர்.  இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வீர பாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, அரசனேந்தல் கிராம மக்கள் தங்கமணி, திருவேல், ராமச்சந்திரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அவர்களை சந்தித்து மனு கொடுத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய ஆட்சியர் தற்போது கொடுக்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்து, முன்னாள் இருந்த பெயருக்கே மாற்றம் செய்ய உத்தர விட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கோட்டாட்சி யரை தலைவர்கள் சந்தித்துப்பேசியுள்ளனர்.  இந்த நிலையில், போலி நபர்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டது குறித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் வீரபாண்டி கேட்டுக் கொண்டார்.

புலிகளைக் கண்காணிக்க கேமிராக்கள்

திருவில்லிபுத்தூர், ஜூன் 1-  திருவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வசிக்கும் புலிகளை துல்லியமாகக் கணக்கிட நவீன கேமராக்களை வனத்துறையினர் பொருத்தி வரு கின்றனர் இதற்காக சுமார் 300 கேம ராக்கள் வரவழைக்கப்பட்டு 150 இடங்களில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. திரு வில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, இராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, மதுரை மாவட்டம் சாப்டூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கேமிரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது,