tamilnadu

img

தீக்கதிர் திருப்பத்தூர் மாவட்ட நிருபர் முருகேசன் மறைவு

சென்னை, நவ. 16- சென்னை பதிப்புக்குட்பட்ட திருப்பத்தூர் மாவட்ட நிருபர் கே. முருகேசன் (49) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி புதனன்று (நவ.16) மரணமடைந்தார். மருத்துவமனையில் வைக்கப் பட்டிருந்த அவரது உடலுக்கு தீக்கதிர் சென்னை பதிப்பு  பொதுமேலாளர் (பொறுப்பு)  உ.உஷா, முன்னாள் பொது மேலாளர் சி.கல்யாண சுந்தரம், பொறுப்பாசிரியர் அ.விஜயகுமார், தலை மை நிருபர் ஸ்ரீராமுலு, வைகை அச்சக மேலாளர் இளங்கோ, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன்  உள்பட பலர்  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராம லிங்கம், முதன்மை பொது  மேலாளர் என்.பாண்டி,  மதுரைப்பதிப்பு பொறுப்பாசிரி யர் எஸ்.பி.ராஜேந்திரன், டிஜிட்டல் பதிப்பு பொறுப்பா சிரியர் எம். கண்ணன் உள்ளிட்ட பலரும் முருகேசன் மறைவுக்கு  இரங்கல் தெரி வித்தனர். அவரது உடல்  அவரது  சொந்த ஊரான வேலூர் மாவட்டம்,  பேர்ணாம்பட்டு, சின்னதாமல் செருவு, ஓங்குப்பம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.  அவரது கண்கள் இரண்டும் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன. வியாழனன்று (நவ. 17) மாலை 3 மணியளவில் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. உயிரிழந்த முருகேசனுக்கு மேரி என்ற மனைவியும், சவுமியா என்ற மகளும், சஞ்சை என்ற மகனும் உள்ளனர்.