திருவனந்தபுரம், நவ.29- கேரள அரசுப் பேருந்துகளில் 2024 ஜனவரி முதல் டிஜிட்டல் முறை யில் பணம் செலுத்தும் வசதியை கேஎஸ்ஆர்டிசி வழங்க உள்ளது. அனைத்து கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து களிலும் பயணிகள் கட்டணங்களை நேரடியாக செலுத்தும் வசதியுடன் டிஜிட்டல் முறையில் செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்படும். பயணச்சீட்டுக் கட்டணம், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், கூகுள் பே மற்றும் க்யூஆர் கோட் மூலம் செலுத்தலாம். பயணச்சீட்டுகளை தொலைபேசியில் டிஜிட்டல் முறை யில் வாங்கலாம். இதற்கெல்லாம் ஒரு ஆண்ட்ராய்டு டிக்கெட் மெஷின் ஆப் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இத்திட்டத்திற்காக ‘சலோ ஆப்’ என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆப் மூலம் பேருந்து நகர்வை கண்காணிக்கும் அமைப்பும் இருக்கும். முன்கூட்டியே அறியலாம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் செயலியின் வருகை யால், பயணிகள் தங்களுக்கு அருகில் உள்ள பேருந்து மற்றும் வாக னத்தின் போக்குவரத்தைப் பற்றி முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும். அருகிலுள்ள பேருந்து காத்திருப்பு மையங்கள் மற்றும் ஒவ்வொரு மையத்திலும் பேருந்து களின் வருகை நேரத்தையும் செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும். டிசம்பர் இறுதியில் சோதனை நிறைவடையும். இத்திட்டம் ஜனவரி யில் தொடங்கும்.