மதுரை, ஜூன் 29- தனுஷ்கொடியின் மரனத்துக்கு அரசின் செயலின்மையே காரணம் என்று மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு: மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றினைக் கையாள்வதில் செய லின்மையும் குளறுபடியும் தொடர்ந்து நீடித்து வருகின்றன. பலமுறை எடுத் துக்கூறியும் அதனைப் புரிந்து கொள் ளாத நிலை தொடர்கிறது. கடந்த ஒன்றாம் தேதி முதல், சோத னையை அதிகப்படுத்தப் பலமுறை கூறியும் கேட்காததன் விளைவை இன்று மதுரை சந்தித்துக் கொண்டி ருக்கிறது. இப்பொழுது பிரச்சனை வளர்ந்து, அடுத்த கட்டத்தினை எட்டி நிற்கிறது. மதுரையில் தொற்றுப்பர வும் வேகமானது 7.9சதவீதம் இருப்ப தைச் சுட்டிக்காட்டி அதற்கேற்ற வேகத் தில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று எழுத்துப்பூர்வமான ஆலோச னையை வழங்கியுள்ளேன். கடந்த 24ஆம் தேதி சிறப்புக் கண்காணிப்பு அதிகாரியிடம் உடனடியாக 3500 படுக்கைகளை உருவாக்குங்கள் என்று கூறினேன்.
தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகவேகமாக அதிகமாவதை முன் னிட்டு 26ஆம் தேதி முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் கொரோனா நல வாழ்வு மையங்களில் 4500 படுக்கை களை ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறி னேன். ஆனால், போர்க்கால அடிப்படை யில் நடைபெற வேண்டிய பணிகளில் எவ்வளவு மெத்தனம்? கடந்த சில நாட் களாக நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட நோயர்கள் கண்டறியப்படு கின்றனர். கண்டறியப்பட்டவுடன் அவர்களுக்கான மருத்துவ வசதி தயார்நிலையில் இருக்க வேண்டும் என்பதுதான் அரசின் உத்தரவு. ஆனால் பல மணிநேரம் அவர்கள் காத்துக்கிடக்க வேண்டிய சூழல். முறையான வழி காட்டலும் ஏற்பாடுகளும் இல்லாத குழப்பம். இந்நிலையில் நேற்று (28 ஜூன்) தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட கோவிட் நலவாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டவர்கள், எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படாததால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். மதியம் 200 பேருக்கு சாப்பாடு உள்ளிட்ட ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மாலை கூடுதலாக சுமார் 600 பேர் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஏற்பாடு கள், உதவியாளர்கள், பணியாளர்கள் ஆகிய எதையும் அதிகப்படுத்தவில்லை. இதனால் மாலையிலிருந்தே பிரச் சனை ஏற்பட்டு, குடிக்கத் தண்ணீர்கூட கிடைக்கவில்லை என்ற நிலையில் விரக்தியுற்ற தனுஷ்கோடி என்பவர் தற்கொலை செய்துகொள்ள இரண் டாம் மாடியில் இருந்து கீழே விழுந்து, இன்று (ஜூன் 29) காலை உயிர்நீத்துள் ளார். உடனிருந்த எண்ணற்ற நோயர் கள் கடும் பதட்டத்திலும் பயத்திலும் இரவு முழுவதும் பெருஞ்சிரமத்துக்கு உள்ளாயினர். முழுக்க முழுக்க நிர்வாகப் பொறுப்பின்மையால் ஏற்பட்ட விளைவு இது. கோவிட் முகாமுக்கு கூடுதலாக 600 பேரை அனுப்பிவைக்கும்போது அதற்கான அடிப்படை வசதியை உறுதிப்படுத்தும் வேலையைக்கூட நிர்வாகம் செய்யவில்லையென்றால், அமைச்சர்கள் நாள் முழுக்க என்ன ஆய்வுக்கூட்டத்தை நடத்துகிறீர்கள்? என்னதான் ஏற்பாட்டினைச் செய்கி றீர்கள்? நிலைமையை முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசென்றால், நான் மக்களிடம் பீதியைக் கிளப்பு வதாக அமைச்சர் உதயக்குமார் கூறு கிறார்.
வழக்கு பதிவுசெய்வோம் என்கிறார். அமைச்சர் அவர்களே, நான் பீதி யைக் கிளப்பவில்லை, நீங்கள்தான் மக்களின் உயிரைத் துச்சமென நினைத்துச் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறீர்கள்; எந்த ஆலோசனையை யும் ஏற்க மறுக்கிறீர்கள். தனுஷ்கோடியின் மரணத்துக்கு நிர்வாகச் செயலின்மையும் பொறுப் பின்மையுமே காரணம். இத்தகைய துயர மரணங்கள் இத்தோடு முடிவுக்கு வரவேண்டும். கோவிட் நலவாழ்வு மையங்களை முழுவேகத்தில் தயார்ப்படுத்துங்கள். வழக்கு போடுவோம் என்று சொல்ல வாய்வீச்சு போதும். ஆனால் இப் பொழுது தேவை செயல். அதற்கு முயற்சிசெய்யுங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.