மோடி அரசாங்கத்தின் தனியார்மயக் கொள்கையின் மிகவும் மோசமான அம்சங்கள் முன்னுக்கு வந்திருக்கின் றன. பொதுத்துறை நிறுவனங்களில் நிதித்துறையில் தங்கக் கிரீடமாக ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் என்னும் எல்ஐசி-யின் பங்குகளைத் தனியா ருக்குத் தாரைவார்ப்பதற்கான தொடக்கப் பங்கு விற்பனை (IPO-Initial Public Offering) என்னும் நடவடிக்கை வரும் பிப்ரவரி தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆயுள் காப்பீட்டுக் கழகம், நாட்டில் ஆயுள் காப்பீட்டுக் கலாச்சாரத்தைப் பரப்பிக்கொண்டிருப்பதில் முன்னோடி நிறுவனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நிக ரற்ற நிறுவனமாகும். நாட்டின் மக்களுக்கு, குறிப்பாக ஏழை மற்றும் வடுப்படத்தக்க நிலையில் உள்ள மக்க ளுக்கு, அரசாங்கத்தின் மூலம் சமூகப் பாதுகாப்புத் திட்டங் கள் எதுவும் வலுவானவிதத்தில் வழங்கப்படாத நிலையில் எல்ஐசி மூலமாக மிகவும் விரிவான அளவில் மக்களுக்குக் காப்பீடு அளிக்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியமான தாகும்.
பாலிசிதாரர்களுக்கு முக்கியத்துவம்
எல்ஐசி தனித்துவமிக்கதோர் அமைப்பாகும். இது, சாமானிய மக்களுக்கு காப்பீடு அளித்திட வகை செய்கி றது. இதன் மூலம் வரும் லாபப் பங்கீடு, பிரதான முத லீட்டாளராக விளங்கும் அரசாங்கத்திற்கு, வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே அளிக்கப்பட்டு, மீதம் உள்ள 95 சதவீத மும் பாலிசிதாரர்களுக்கே அளிக்கப்படும் விதத்தில் விதி கள் வகுக்கப்பட்டிருக்கிறது. (இப்போது எல்ஐசியின் பங்குகளைத் தனியார்மயத்திற்குத் தள்ளிவிட வேண்டும் என்கிற நோக்கத்துடன், பாலிசிதாரர்களுக்கு அளிக்கப் பட்டுவந்த அளவு 90ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது.) இவ்வாறு, இதர காப்பீட்டு நிறுவனங்களைப் போல் அல்லா மல், எல்ஐசி-யின் லாபங்கள் பங்குதாரர்களுக்கு வழங்கப் படாமல், பாலிசிதாரர்களுக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது. எல்ஐசி, 1956இல் அமைக்கப்பட்டதிலிருந்து, ஆயுள் காப்பீடு முழுமையாக வழங்கப்படுவதற்காக அதற்கு நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோள்களை முழுமையாக அது நிறைவேற்றியிருக்கிறது. குறிப்பாக, கிராமப்புறப் பகுதிகளுக்கும், சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியா கவும் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு விரிவான அளவில் அது காப்பீடு வழங்கியிருக்கிறது.
இன்சூரன்ஸ் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதித்த பின்னரும் கூட, எல்ஐசி நிறுவனம் ஆயுள் இன்சூரன்ஸ் வர்த்தகத்தில் தன் ஆதிக்க நிலையைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. 2020-21ஆம் ஆண்டில் ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசிகள் வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக, எல்ஐசியின் சந்தைப் பங்கு என்பது அனை த்து நிறுவனங்களும் பெற்றுள்ள ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசிகளில், எல்ஐசி மட்டும் அநேகமாக நான்கில் மூன்று பங்கு பாலிசிகளைப் பெற்றிருக்கிறது. எல்ஐசி 40 கோடி பாலிசிதாரர்களைப் பெற்று, 3.03 லட்சம் கோடி ரூபாய் பிரி மியம் வருமானத்தை ஈட்டியிருக்கிறது. அது துவக்கப்பட்ட திலிருந்து, அரசாங்கத்திற்கு டிவிடிண்ட் தொகையாக 28,695 கோடி ரூபாய் அளித்திருக்கிறது. மேலும் அது வங்கிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு முதலீடுகளைச் செய்திருக்கி றது. மாநிலங்களில் அவற்றின் உள்கட்டமைப்பு வசதிக ளுக்காகவும், சமூக நலத்திட்டங்களுக்காகவும் மிகப்பெரிய அளவில் பங்களிப்புகளைச் செய்திருக்கிறது. இவ்வாறு அது அளித்துள்ள பங்களிப்புகள், 2020-21ஆம் ஆண்டில் சுமார் 26,322 கோடி ரூபாய்களாகும்.
பத்தாண்டுகளில் பந்திவைப்பு
இவ்வாறு அனைத்து விதங்களிலும் நிகரற்று விளங்கும் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தை இந்திய மற்றும் அந்நிய தனியார் முதலீட்டாளர்களுக்குத் திறந்துவிட ஒன்றிய அரசாங்கம் முன்வந்திருக்கிறது. இவ்வாறு எல்ஐசியைத் தனியாருக்குத் தாரை வார்ப்ப தற்காக 2021-22ஆம் ஆண்டு நிதிச் சட்டமுன்வடிவின் மூல மாக எல்ஐசி சட்டத்திற்குத் திருத்தம் கொண்டுவரப் பட்டது. அரசாங்கம், எல்ஐசியில் உள்ள தன் பங்குகளை அடுத்த பத்தாண்டுகளில் தனியாருக்குத் தாரை வார்த்தி டும் விதத்தில் நீர்த்துப்போகச் செய்வதற்கான வேலைக ளில் இறங்கி இருக்கிறது. இப்போது முதல்கட்டமாக அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் அரசாங்கத்தின் பங்கு கள் 75 சதவீதத்திற்குக் குறைக்கப்படும் என்றும், அதன் பின்னர் எல்ஐசியில் தன் பங்குகள் 51 சதவீதமாக இருந்தி டும் என்றும் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இது எல்ஐசி யின் முகத்தோற்றத்தையே கடுமையாக மாற்றியமைத் திடும். இதில் முதலீடு செய்திடும் இந்திய மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் எல்ஐசி தற்போது அரசமைப்புச்சட்டத் தின் வழிகாட்டும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு மேற் கொண்டுவரும் சமூக நலத் திட்டங்களை ஓரங்கட்டச் செய்வதற்கு நிர்ப்பந்தங்களை அளித்திடுவார்கள்.
பொதுத்துறை மற்றும் பொதுச் சேவைகள் மீதான மக்கள் ஆணையம் (The People’s Commission on Public Sector and Public Services), எல்ஐசி பங்கு விற்பனை குறித்து தன்னுடைய அறிக்கையில் கூறியிருப்ப தாவது: “எல்ஐசி பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவு, சமூகத்தில் அனுகூலமற்ற பிரிவினருக்கு எல்ஐசி அளித்துவரும் பங்களிப்பில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். பல லட்சக்கணக்கான அதன் சிறிய பாலிசி தாரர்கள் ஆற்றி வரும் முக்கிய பங்கினை நீர்த்துப்போகச் செய்திடும், லாபம் ஈட்டும் பணக்கார முதலீட்டாளர்களு க்கு ஆதரவாக மாறிடும். இம்முடிவானது மறைமுகமாக, இது மிகப்பெரிய அளவிலான குடும்ப சேமிப்புகளை அந்நிய மற்றும் தனியார் முதலீட்டாளர்களுக்கு, முட்டாள் தனமாக முறைமாற்றிவிடுவதையே காட்டுகிறது.”
குறை மதிப்பீடும் ஊழலும்
எல்ஐசி பங்கு விற்பனை தொடர்பாக மதிப்பீட்டு முறை (valuation procedure), எவரும் புரிந்துகொள்ள முடியாத விதத்தில் தெளிவின்றி இருக்கிறது. எல்ஐசி யின் மதிப்பு 15 லட்சம் கோடி ரூபாய் என்றும் அதன் உட் பொதிக்கப்பட்ட மதிப்பு (embedded value) நான்கு லட்சம் கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டிருப்பது, முற்றிலும் குறைந்த மதிப்பீடாகும். இவ்வாறுதான் இந்த அரசாங்கத் தால் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்கள் குறைத்து மதிப்பிடப்பட்டு, தனியாருக்கு அடிமாட்டு விலை க்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு எல்ஐசி பங்கு விற்பனை என்பது தனியார் பெரும் கார்ப்பரேட்டுக ளுக்கு எல்ஐசி பணத்தை அப்படியே முழுமையாக அள்ளி வழங்கிடும் ஒரு நடவடிக்கை என்று மெய்ப்பிக்கப் பட்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதில் உள்ள ஊழல், சமீபத்தில் ஒன்றிய அமைச்ச கத்தின் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறை யின் கீழ் இயங்கிவந்த பொதுத்துறை நிறுவனமான சிஇஎல் எனப்படும் சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் விற்பனை செய்யப்பட்டதில் அப்பட்டமாகத் தெரிந்தது. சிஇஎல் நிறுவனம், நந்த்லால் ஃபைனான்ஸ் அண்ட் லீசிங் பிரைவேட் லிமிடெட் என்னும் தனியார் நிறுவனத்திற்கு வெறும் 210 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. சிஇஎல் நிறுவனமானது, சோலார் செல்கள், சோலார் இயந்தி ரங்கள், ரயில்வே சமிக்ஞை அமைப்புமுறைகள் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பல்வேறு பொருள்கள் போன்று மின்னணுத்துறையில் மிகவும் முக்கியமான பொருள்களை உற்பத்தி செய்துவந்த முன்னோடி நிறு வனங்களில் ஒன்றாகும்.
இந்த நிறுவனம் இந்தத்துறையில் எவ்விதமான அனுபவமுமில்லாத, இரண்டகமான கடந்தகால வர லாற்றைக்கொண்டுள்ள ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு விற்கப்பட்டிருக்கிறது. சிஇஎல் நிறுவனத்திற்குச் சொந்த மான 50 ஏக்கர் நிலத்தின் சந்தை மதிப்பே தற்போது 440 கோடி ரூபாய்களாகும். இந்நிறுவனம் 2021 நிதியாண்டில் 124 கோடி ரூபாய்கள் மொத்த லாபம் ஈட்டியிருந்தது. இவ் வாறு அரசாங்கத்திற்கு லாபத்தை அள்ளித்தந்த நிறுவனத்தை அரசாங்கம் அடிமாட்டு விலைக்கு விற்க முன்வந்திருப் பது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அரசாங்கம் இப்போது விற்பனை யைச் சற்றே ஒத்திவைத்திடும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
சூறையாடலைத் தடுக்க...
மோடி அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களையும், நாட்டின் சொத்துக்களையும் இந்திய மற்றும் அந்நிய கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க முன்வந்திருக்கும் திட்டமானது நாட்டின் பொருளாதார இறையாண்மையை அரிக்கச் செய்திடும் நாசகரமான நடவடிக்கையாகும். சமூக மற்றும் பொருளாதார சமத்துவம் தொடர்பாக அரசமைப்புச்சட்டத்தில் உள்ள வழிகாட்டும் நெறி முறைகளை சீர்குலைத்திடும் நடவடிக்கையாகும். கடந்த பல ஆண்டுகளாக மக்களால் கட்டி எழுப்பப்பட்ட நாட்டின் வளங்களை இந்திய மற்றும் அந்நிய கார்ப்பரேட்டுகள் சூறையாடுவதற்கு வழியேற்படுத்தித்தரும் நடவடிக்கை யாகும்.
எல்ஐசி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சீர் குலைத்திடும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு நாடு சூறையாடப்படுவதைத் தடுத்திட நாட்டி லுள்ள அனைத்து ஜனநாயக மற்றும் நாட்டுப்பற்று கொண்ட சக்திகளும் விரிவான அளவில் அணிதிரள வேண் டியது அவசியத் தேவையாகும். எல்ஐசி, பொது இன்சூரன்ஸ் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஊழியர் கள் அரசின் இத்தகைய தனியார்மயத்திற்கு பொதுத்துறை நிறுவனங்களைத் தாரைவார்த்திடும் நடவடிக்கைகளு க்கு எதிராக போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். இவர் களின் போராட்டம் மத்தியப் பொதுத்துறை நிறுவனங்க ளில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்கள்-ஊழி யர்களாலும் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். தொழி லாளர் வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டத்தின் ஓர் அங்க மாக மாறிட வேண்டும். மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்க ளின் கூட்டுமேடை வரும் பிப்ரவரி 23-24 தேதிகளில் நடத் திடவிருக்கும் இரண்டு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் இந்தப் போராட்டத்தில் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்திடும்.
தமிழில்: ச.வீரமணி