tamilnadu

img

பாதாளச்சாக்கடை அடைப்பு அகற்றம்: மனிதர்களே இறங்கிடும் அவலம்!

மதுரை, செப்.26 - துப்புரவுப் பணியாளர்களை பாது காப்பு உபகரணங்கள் இன்றி பாதாளச் சாக்கடைக் குழிக்குள் இறங்கி வேலை செய்யச் சொல்லும் கொடுமை இன்னும் நின்றபாடில்லை. மதுரை தல்லாகுளம் கருப்பண சுவாமி கோவில் அருகே புதன்கிழமை பாதாளச்சாக்கடை குழிக்குள் இறங்கி தொழிலாளி ஒருவர் சாக்கடை அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டார். அவரது கழுத்துப்பகுதி தவிர உடல் முழுவதும் சாக்கடை கழி வுகளுக்குள் தானிருந்தது. அவருக்கு உதவியாக மற்றொரு தொழிலாளியும் உடனிருந்தார். அவர் அடைப்பை நீக்கு வதற்கான குழாயை எடுத்துக் கொடுத்து கொண்டிருந்தார்.  உடனிருந்த தொழிலாளி கூறுகை யில், பாதாளச்சாக்கடைக்குள் இறங்கும் எங்களுக்கு பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்படவில்லை என்றார். இந்தப் பிரச்சனை குறித்து, மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்வாகியுமான ஏ.சகாய பிலோமின் ராஜ் கூறுகையில், இது போன்ற சம்பவங்களைத் தடுக்கத் தவ றியது பொறுப்பு அதிகாரிகள்தான்.  பாதுகாப்புக் கருவிகள் இல்லாமல் இதுபோன்ற பணிகளில் துப்புரவுப் பணி யாளர்களை ஈடுபடுத்தக்கூடாது என அவர்களது மறுவாழ்வுச் சட்டம் 2013- கூறுகிறது. ஆனால், இன்றைக்கும் துப்புரவுப் பணியாளர்களின் நிலையில் மாற்றம் வரவில்லையென்றார். இவர் கிராம ஊராட்சிகளில்  பணியாற்றும் தூய்மைக் காவலர்கள் மற்றும் துப்புர வுப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதற்கான சட்டத் தீர்வு கள் குறித்து ‘அறிவோம் அணிதிரள் வோம் உரிமைகளைவெல்வோம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டவராவார். அவர் மேலும் கூறுகையில், தொழி லாளர்களின் பாதுகாப்பை உறுதி செய் வதற்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டுமென சட்டம் கூறு கிறது. ஆனால். இது நடைமுறையில் இல்லை. இது போன்ற பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர்களுக்கு உள்ளது என்றார். சமாளிக்கும் மதுரை ஆணையர் இதுகுறித்து மாநகராட்சி ஆணை யர் எஸ்.தினேஷ்குமார் கூறியதாவது: “பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினாலும், விழிப்புணர்வு ஏற்படு த்தினாலும், அவர்கள் பாதாளச்சாக் கடைகளில் இறங்குகின்றனர்.  மதுரை மாநகராட்சியில் அடைப்பு களை அகற்றுவதற்கு உறிஞ்சும் வாகனங்கள் உள்ளன. ஆனால், அவற்றை பயன்படுத்த தொழிலாளர் கள் தயங்குகின்றனர். நாங்கள் அவர்களுக்கு கையுறைகள் மற்றும் காலணிகளை வழங்கியிருந்தாலும், அவர்கள் அவற்றை ஒருபோதும் பயன்படுத்துவதில்லை” என்றார். இந்தக் கருத்து குறித்து சகாய பிலோமின் ராஜ் கூறுகையில், “மேலதி காரி பாதாளச்சாக்கடைக்குள் இறங்கு என தொழிலாளிக்கு கட்டளையிடும் போது அவர் அதற்கு கீழ்ப்படிவதைத் தவிர வேறுவழியில்லை. மாறாக, பாதாள சாக்கடைக்குள் இறங்கிய தொழிலாளியை குற்றம்சாட்டுவது முறையல்ல” என்றார். பாதாளச்சாக்கடையில் துப்புரவுத் தொழிலாளர்கள் இறங்கிப் பணி யாற்றும் போது அவர்களை கண்காணிக்க ஏன் அதிகாரிகள் யாருமில்லை என்பது தான் கேள்வி.