tamilnadu

img

வங்கதேச மக்களைத் திருப்பி அனுப்புவது மனிதாபிமானமற்றது!

வங்கதேச மக்களைத் திருப்பி அனுப்புவது மனிதாபிமானமற்றது!

ஏதுமற்ற ஏழைகள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்

மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

புதுதில்லி, மே 31- வங்கதேச மக்கள் மனிதாபிமான மற்ற முறையில் திருப்பி அனுப்பப்  படுவதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசி யல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது: முஸ்லிம்களை குறிவைத்து நடக்கும் நாடு கடத்தல் சந்தேகத்திற்குரிய வங்கதேச மக்களை மனிதாபிமானமற்ற முறையில் தடுத்து, மீண்டும் அவர்  கள் நாட்டிற்கு நாடு கடத்துவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண் டிக்கிறது. சட்டவிரோதமாக நாட்டிற்  குள் நுழைந்தவர்களை, நாட்டில் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறை விதிகளின்படியே கையாள வேண்டும். பஹல்காமில் நடந்த பயங்கர வாத தாக்குதலுக்குப் பிறகு, பாஜக  தலைமையிலான மாநில அரசு களும் ஒன்றிய அரசும், குறிப்பாக வங்காள மொழி பேசும் முஸ்லிம்  களைக் குறிவைத்து, எந்த சரி பார்ப்பும் இல்லாமல், அவர்களை வங்கதேசத்திற்குத் திருப்பி அனுப்பி வருகின்றன.  அவசர கதியான நடவடிக்கையால் இந்தியக் குடிமக்களும் பாதிப்பு வெளியாகியுள்ள செய்திகளின் படி, சில உண்மையான இந்தியக் குடிமக்களும் கைது செய்யப்பட்டு வங்காள தேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். தீர்ப்பாயங்களால், ‘வெளிநாட்டி னர்’ என்று அறிவிக்கப்பட்ட குடிமக் கள், அவற்றை எதிர்த்து அசாம் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடுகள் செய்திருக்கிறார்கள். இவ்வாறு மேல்முறையீடு செய்திருப்பவர்கள் கூட திருப்பி அனுப்பிவைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதை அனு மதிக்கக்கூடாது. பழங்குடியினரை ஆயுதபாணி ஆக்குவது விபரீதமானது பாஜக தலைமையிலான அசாம் அரசாங்கம், தனது மத வெறிக் கொள்கைகளைத் தீவிரமா கப் பின்பற்றி வருகிறது. இப்போது  ‘பழங்குடி மக்களை’ ஆயுதபாணி யாக்க முடிவு செய்துள்ளது. இது  கடும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஓர் ஆபத்தான முடிவாகும்.  சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்ப தும், ஊடுருவலைத் தடுப்பதும் அர சாங்கத்தின் கடமையாகும். அவர்  களை மீண்டும் திருப்பி அனுப்பு வதும், மக்களில் சில பிரிவினரை ஆயுதபாணியாக்குவதும் இவற்றுக்  குத் தீர்வுகள் அல்ல. சட்ட நடைமுறைகளின் படியே விசாரணை நடத்தப்பட வேண்டும் சட்டவிரோதமாக வந்திருப்ப வர்களை அடையாளம் காண மதத் தைப் பயன்படுத்த வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தைக் கேட்டுக்  கொள்கிறது. சட்டவிரோதமான வழிகளில் நாட்டிற்குள் நுழைந்த வர்கள் மீதான விசாரணை நியா யமான முறையில் நடைபெற அனு மதிக்க வேண்டும். எந்தவொரு தீங்கி ழைக்கும் நோக்கமும் இல்லாமல் நாட்டிற்குள் வந்துள்ள ஏழை மக்கள்  கண்ணியமாக நடத்தப்பட வேண்  டும். அவர்கள் மீதான விசாரணை  நாட்டில் உள்ள சட்ட நடைமுறை களின்படி மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அரசியல் தலைமைக்  குழு அறிக்கையில் கோரியுள்ளது. (ந.நி.)