tamilnadu

img

எம்.இ, எம்டெக், எம்ஆர்க்: விண்ணப்பம் வரவேற்பு

சென்னை,ஜூலை 4- தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவிபெறும், அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சுயநிதி  பொறியியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை பொறியி யல் படிப்பு சேர்க்கைக்கு ஆக.3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும், அண்ணா  பல்கலைக்கழக துறை மற்றும்  உறுப்புக் கல்லூரி கள், அண்ணாமலை பல் கலைக்கழகம் மற்றும் சுய நிதி பொறியியல் கல்லூரிக ளில் உள்ள முதுநிலை பொறி யியல் படிப்புகளில் சேர்க்கை க்கு ஆகஸ்ட் 3 ஆம்  தேதி வரை விண்ணப்பிக்க லாம் என பொறியியல் படிப்பிற்கான மாணவர்கள் பொது சேர்க்கை பிரிவின்  சார்பில் அறிவிக்கப்பட் டுள்ளது

இது குறித்து வெளி யிடப்பட்டுள்ள அறிவிப்பில், 2022-2023 கல்வி ஆண்டில் சேருவதற்கான எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு ஆகஸ்ட் 3 ந் தேதி வரையில் ஆன்லைன் மூலம் https://tanca.annauniv.edu/tanca22/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 2022  தமிழ்நாடு பொது நுழைவுத்  தேர்வு அல்லது கேட்  மதிப்பெண்கள் அடிப்படை யில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.கேட்  மதிப்பெண்கள் அடிப்படை யில் கலந்தாய்வு நடை பெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.  இந்த ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன், தேவைப்படும் சான்றிதழ் நகல்களுடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அண்ணா பல்கலைக் கழக துறைகளுக்கு இயக்கு நர், மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக் கழகம்,  சென்னை – 600 025 என்ற  முகவரிக்கும், அரசு  பொறியியல் கல்லூரிக ளுக்கு முதல்வர் கோவை அரசு பொறியியல் கல்லூ ரிக்கும், அரசு உதவி பெறும்  பொறியியல் கல்லூரிக ளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தொடர் புடைய கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு மதிப் பெண்கள் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.