உடுமலை, ஜூலை 1- தேங்காய் எண்ணெய்க்கு ஒன்றிய அரசு விதித்த ஜிஎஸ்டி வரியை முழுமை யாக ரத்து செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய் கிலோ ரூ. 140 என விலை நிர்ணயம் செய்து கூட்டுறவு சங்கத்தின் மூலம் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் முதல் மாநில மாநாடு உடு மலை வாணிமஹாலில் மாநில துணை அமைப்பாளர் முத்துராமு தலைமை யில் வியாழனன்று நடைபெற்றது. மாநா ட்டிற்கு திருப்பூர் மாவட்டத் தலைவர் பரமசிவம் முன்னிலை வகித்தார். இதில், மாநாட்டை தமிழ்நாடு விவ சாய சங்கத்தின் மாநில துணைத் தலை வர் எஸ்.ஆர்.மதுசூதனன் துவக்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி விவசாய சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் குமார், மாவட்டத் தலைவர் பாலதண்டபாணி ஆகியோர் உரையாற்றினர்.
மாநாட்டில் தென்னை விவசாய சங்கத்தின் மாநில அமைப்பாளர் அ.விஜயமுருகன், மாநில நிர்வாகிகள் நாகேந்திரன், ஜெயராமன், காளப்பன், வின்செண்ட், முத்தையா, போஸ், கணேசன் மற்றும் வரவேற்புகுழு தலைவர் ராஜகோபால், தென்னை விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் அருண்பிரகாஷ் உள்ளிட்ட மாநில பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டை நிறைவு செய்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் பெ.சண் முகம் சிறப்புரையாற்றினார்.
இதில், தேங்காய் கொப்பரை கொள் முதல் விலையை ரூ.140 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய வேண்டும். எண்ணெய் வித்துக்கள் இறக்குமதி வரிகுறைப்பை ரத்து செய்திட வேண்டும், தேங்காய் எண் ணெய்க்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும், உரித்த தேங்காய் கிலோ ரூ.50 என விலை நிர்ணயம் செய்து ஒன்றிய, மாநில அரசுகள் கொள்முதல் செய்ய வேண்டும். தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகத்தை மீண்டும் கோவைக்கு மாற்ற வேண்டும். தென்னை சார் தொழில்களைப் பாது காக்க, தென்னை வளர்ச்சி வாரியமும், மத்திய கயிறு வாரியமும் மானியங்கள் வழங்கி தொழில்கள் நடைபெற உதவ வேண்டும். தென்னை சார் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாநாட்டு தீர்மானங் களை ஒன்றிய, மாநில அரசுகள் நிறை வேற்ற வலியுறுத்தி ஆகஸ்ட் 5ல் தென்னை பயிர் சாகுபடி அதிகம் உள்ள மாவட்டங்களில் வருவாய் கோட்டாட்சி யர் அலுவலகங்கள் முன்பாக ஆர்ப் பாட்டம் நடத்துவது என மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராக எஸ்.ஆர்.மதுசூதனன், மாநிலச் செயலாள ராக அ. விஜயமுருகன், மாநிலப் பொரு ளாளராக பி.நாகேந்திரன் மற்றும் துணைத் தலைவராக முத்துசாமி, காளப்பன், செல்வம், துணைச் செய லாளராக ஜெயராமன், வின்சென்ட், மீராகனி மற்றும் மாநிலக்குழு உறுப் பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.