மதுரை, நவ.7- 2015 நவம்பர் முதல் முடக்கப்பட்ட அகவிலைப் படி உயர்வை வழங்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பை அமல்படுத் தாமல் உள்ள தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு மதுரை மண்டலம் சார்பில் மதுரை போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டம் திங்களன்று நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநி லத் தலைவர் எஸ்.கிருஷ் ணன் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.தேவராஜ் விளக்கிப் பேசினார். சிஐடியு அரசு போக்குவரத்து தொழி லாளர் சங்க மாநில சம் மேளன துணைத் தலைவர் பி.வீ.பிச்சை வாழ்த்திப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஏ.முருகேசன். பி.சௌரி தாஸ், எஸ்.ஆறுமுகம், பி. செல்வராஜ், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஜெய பாண்டியன், ஜேம்ஸ் கர்சன் ராஜ், ராஜேந்திரன், விருது நகர் மாவட்ட நிர்வாகிகள் பி. தங்கப்பழம், போஸ், முத் துச்சாமி, போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகிகள் என்.மகாலிங்கம், காமராஜ், ஆர்.நாகராஜன், என்.மனோ கரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.