tamilnadu

img

மணிப்பூரில் வன்முறையை தடுக்கத் தவறிய பாஜக அரசைக் கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்

மதுரை, மே 17-    மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து நடை பெற்று வரும் வன்முறையை தடுக்க நடவ டிக்கை எடுக்காமல் சட்ட  ஒழுங்கை பாது காக்கத் தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மே 17 புதனன்று தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு சார்பில் மதுரை  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே. அலாவுதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் என். கணேசமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் எஸ். எம். லூர்து, அருட்தந்தையர்கள் பெனடிக் பர்னா  பாஸ், எஸ்.லாரன்ஸ் ஆகியயோர் கண்டன உரையாற்றினர்.