மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்
பொன்னமராவதி, ஜுன் 20- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் லதா தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் சித்ரா வரவேற்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சுசீலா துவக்கவுரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் மதியரசி வேலை அறிக்கையை வைத்து பேசினார். மாவட்டத் தலைவர் பாண்டிச்செல்வி, மாவட்ட பொருளாளர் வைகை ராணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு சாலையோர விற்பனையாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் தீன், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் ராமசாமி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் பழனியப்பன், வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் ராஜ்குமார் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய தலைவர் லதா, செயலாளர் மதியரசி, பொருளாளர் சித்ரா, துணைத் தலைவர் பொன்னம்மாள், துணைச் செயலாளர் கௌரி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்களாக கவிதா, சௌந்தரம், மணிமேகலை, ராஜாமணி, பகுபுல்ஷா, பழனியம்மா ஆகியோரை அறிமுகம் செய்து, சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கே. பொன்னுத்தாய் நிறைவுரையாற்றினார். மேலும், பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர் மற்றும் செவிலியர்களை பணியமர்த்த வேண்டும். பொன்னமராவதி காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். நூறு நாள் வேலையை 200 நாளாகவும் 600 ரூபாய் சம்பளமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.