tamilnadu

img

அர்ஜுன் சம்பத்திற்கு ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வருகிற  21.11.24  ஈசா யோகா மையத்தில் தொடர்ச்சி யாக நடைபெற்று வரும் சமூக விரோத செயல்க ளையும் போக்சோ உள்ளிட்ட ஏராளமான வழக்கு களை தாங்கி,  மர்ம தேசமாக விளங்குவதை கண்டித்தும், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அனைத்து வழக்குகளையும் தமிழக அரசும்  காவல்துறையும் துரிதமாக நடவடிக்கை எடுக்கக் கோரி  ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்தி ருந்தோம்.  இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலை வர் அர்ஜுன் சம்பத் அவர்கள் ஒரு அறிக்கையை  வெளியிட்டுள்ளார்.  அதில் ஈஷா யோகா மையத் தின் அனைத்து நடவடிக்கைகளையும் நியாயப் படுத்தியும்,  மேலும் ஈஷா இப்பகுதிக்கு வராமல் இருந்தால் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் இப்பகுதியை கபளீகரம் செய்திருப்பார்கள் என வும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகை யிலும் மதவெறியை தூண்டும் வகையிலும் பிற மதத்தினர் மனம் புண்படும்  வகையில், வெறுப்பு அரசியலை முன்னெடுத்து அறிக்கை யில் குறிப்பிட்டிருக்கிறார். 

மேலும் ஈஷா யோகா மையத்தின் அத்து மீறல் களான யானை வழித்தடங்கள் அழிப்பு ,பழங்குடி  மக்களின் நிலங்கள் அபகரிப்பு ,அனுமதி இன்றி கட்டிடங்கள் எழுப்புதல், அனுமதி இன்றி  தகன மேடை அமைத்துள்ளது,காலாவதியான மருந்து களை மருத்துவ முகாம்களில் வழங்கியது, மருத்துவ முகாமுக்கு வந்த குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல் நடத்தியது,  மையத்திற்குள் செல்பவர்கள் மாயமாவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட, இயற்கையை நேசிப்ப வர்கள், சமூகத்தை நேசிப்பவர்கள், ஜனநாயக சக்திகள் எதிர்த்து வருகின்றன. நீதிமன்றத்தில் பல வழக்குகள் இது தொடர்பாக நிலுவையில் இருப் பது உலகம் அறிந்த விசயமாகும்.  ஈஷாவுக்கு ஆதரவு என்ற பெயரில் அதன் சமூக விரோத செயல்களுக்கு துணை போகும் இந்து மக்கள் கட்சியும், அதன் தலைவருமான அர்ஜுன் சம்பத் அவர்கள்  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என, சட்டம் ஒழுங்கு பிரச்ச னையை உருவாக்குவதற்கே ஆரம்பிக்கப்பட்ட அமைப்பும், அதன் தலைவரும் கூறுவது கேள்விக்குரியதாகும்.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள தயாராக இல்லாத இந்து மக்கள் கட்சி இது போன்ற அவதூறு பிரச்சாரங்களை செய்து வருவதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் பெண்  உரிமைக்கான போராட்டத்தில் முன்னணி களத்தில் நிற்கும் அமைப்பு. நாங்கள் நடத்திய போராட்டம் ஏதாவது ஒன்றில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதாக அர்ஜுன் சம்பத் அவர்க ளால் நிரூபிக்க முடியுமா? என்ற கேள்வியும் முன் வைக்கிறோம். மனுவாத கோட்பாடுகளின் பின்னால் நின்று பெண் சமத்துவத்தையும் பெண்ணுரிமையை யும் ஏற்றுக்கொள்ளாத இந்து மக்கள் கட்சி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் போராட்டத்தை,இது மாதிரியான அறிக்கை கள் மூலமாகவோ, மிரட்டல்கள் மூலமாகவோ, தடுத்து நிறுத்திவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் நிறைவேறாது. வாச்சாத்தி வழக்கு, சின்னான்பதி வழக்கு, சிதம்பரம் பலாத்கார படுகொலை , அரியலூர் தலித் சிறுமி பாலியல் பலாத்கார  படுகொலை வழக்கு, கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கு, என பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக தமிழகத்தில் நீண்ட நெடியபோராட்ட வரலாற்று பாரம்பரியங்களை கொண்டிருக்கிறோம்.  அதி கார வர்க்கத்தின் அடக்கு முறைகளுக்கோ, உங்களை போன்றோரின் மிரட்டல்களுக்கோ அடி  பணிந்த தாக வரலாறு இல்லை. தீர்மானித்தபடி எங்கள் போராட்டத்தை, முற்போக்கு எண்ணம் கொண்ட, ஜனநாய கத்தை நேசிக்கும் ,சமூக அக்கறையுள்ள தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களின் பேராதரவோடு வெற்றிகரமாக நடத்திடுவோம். ஒன்றுபட்ட போராட்டத்தால் மட்டுமே சமூக விரோத,  பல மர்மங்களை உள்ளடக்கியுள்ள ஈஷா யோகா மையத்தின் முறைகேடுகளை  முறி யடிக்க முடியும். அனைத்து ஜனநாயக எண்ணம் கொண்டவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்திட முன்வாரீர். ஆதரவு தாரீர்.