தி.மலை,ஜுன்.28- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பன்னி யாண்டி மக்களுக்கு பட்டி யலின எஸ்சி சாதி சான்று வழங்கக்கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு பன்னியாண்டிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடை பெற்றது. வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் எஸ். ராமதாஸ் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் பா.செல்வன், தமிழ்நாடு பன்னியாண்டிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் டி .ஜி. சம்பத், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம் சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்தி ரன், மாவட்டக் குழு மற்றும் பல்வேறு சங்க நிர்வாகி கள் இதில் கலந்து கொண்ட னர். கோரிக்கை குறித்து தீர்வு ஏற்படாததால், சாதி சான்று வழங்கும்வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலை வர்கள் தெரிவித்தனர். சாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்லூரி படிப்பை தொடர இயலாத பிளஸ் டூ மாணவி ராஜேஸ்வரி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டது குறிப்பி டத்தக்கது. மாணவி மரண த்திற்கு நீதி கேட்டு தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வருகிறது.