சென்னை, பிப். 17 - தேர்தல் வாக்குறுதிப் படி, 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு, அடிப்படை ஓய்வூதியத்தில் 10 விழுக்காடு உயர்வு வழங்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற பள்ளி -கல்லூரி ஆசிரியர் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது. மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஓய்வூதியர் களுக்கான செலவினத்தை அரசே ஏற்க வேண்டும், புதிய ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 80 வயது எட்டிய ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் 20 விழுக்காடு வழங்க வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை யன்று (பிப்.17) சென்னை யில் நலச்சங்கத்தின் சார் பில் தர்ணா நடைபெற்றது. நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.முரளீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன் தொடங்கி வைத்தார். நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ந.வர்தராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலை வர் நெ.இல.சீதரன், தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி பொதுச் செய லாளர் ச.மயில், நலச் சங்கத்தின் மாநில பொரு ளாளர் ப.கிருஷ்ணன், துணைப் பொதுச்செய லாளர் டி.மனோகர ஜஸ்டஸ் உள்ளிட்டோர் பேசினர்.