tamilnadu

img

இராமேஸ்வரத்தில் 5-வது நாளாக வேலை நிறுத்தம்!

இராமேஸ்வரம், அக். 20 - இராமேஸ்வரத்தில் வெள்ளிக்கிழ மையன்று 5-ஆவது நாளாக மீன வர்கள் வேலைநிறுத்தப் போராட்ட த்தில் ஈடுபட்டனர். இராமேஸ்வரத்தில் இருந்து கட லுக்குச் சென்று கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சர்புதீன், லிட்டன், மண்டபத்திலிருந்து கடலுக்குச் சென்ற மரிய வாஷிங்டன் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப்படகுகளையும், அதிலிருந்த 12  மீனவர்களையும் இலங்கை கடற்படை யினர் கடந்த சனிக்கிழமை இரவு சிறைப் பிடித்தனர். 12 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோல இராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குச் சென்று, தலை மன்னார் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீன்பிடித்துக் கொண்டி ருந்த கென்னடி, பாஸ்கர் ஆகியோ ருக்குச் சொந்தமான 2 விசைப் படகு களையும், அதில் இருந்த 15 பேரை யும் இலங்கை கடற்படை சிறைப் பிடித்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடு விக்க வலியுறுத்தி, இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் வெள்ளியன்று 5-ஆவது நாளாக தொடர்ந்தது. இதன் காரணமாக ரூ. 10 கோடி மதிப்பிலான இறால் மீன்கள் ஏற்று மதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 25  ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் வேலையிழந்து பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.  இந்நிலையில், மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நவம்பர் 1 முதல் இராமேஸ்வரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் மீனவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.