சென்னை, ஜூலை 5 - நலவாரிய குளறுபடிகளை சரி செய்யக்கோரியும் பணப்பயன்களை அதிகரிக்கக்கோரியும் செவ்வா யன்று (ஜூலை 5) தமிழகம் முழு வதும் முறைசாராத் தொழிலாளர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் 18 நலவாரியங்கள் செயல்படுகின்றன. இவற்றில் சுமார் 38 லட்சம் தொழிலாளர்கள் உறுப்பினர் களாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள 40 நலவாரிய அலுவலகங்களில் உறுப்பினர் பதிவு, புதுப்பித்தல், பணப் பயன் கோரி விண்ணப்பங்கள் பதி வேற்றம் செய்தல் போன்றவற்றில் தொடர்ந்து குளறுபடி நடைபெறு கிறது. இவற்றில் நிகழும் குறைபாடு களை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.
இணைய வழி சேவையின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். நலவாரிய அலுவலகத்திற்கு வரும் தொழிலாளர்களின் விண்ணப்பங் களை வாரியமே நேரடியாக ஆன்லை னில் பதிவேற்ற வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் நலவாரிய செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும், பணப்பயன்களை தாமத மின்றி வழங்க வேண்டும், ஓய்வூதி யத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும், விபத்து மரண நிதியை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தவேண் டும், முறைசாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் இஎஸ்ஐ, பிஎப் திட்டத்தை அமல்படுத்தவேண்டும், சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை
சிஐடியு முறைசாரா சங்க கூட்ட மைப்பின் சென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழி லாளர் நலத்துறை ஆணையர் அலு வலகம் முன்பு இந்த பெருந்திரள் முறையீடு போராட்டம் நடை பெற்றது. சிஐடியு மாநில துணைப்பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகம் முழுவதும் மாவட்ட நலவாரிய அலுவலங்கள் முன்பு சிஐடியு-முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நலவாரியத்தின் பணப்பலன்கள் முழுமையாக தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டும், நலவாரிய ஆன்லைன் பதிவுகள் மேம்படுத்த வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்கவும் அனுமதிக்க வேண்டும், ஈ-ஸ்ரம் போர்ட்டல் என்ற பெயரில் மிகக்குறைவான நலவாரிய பயன்களை ஒன்றிய மோடி அரசு அறிவித்துள்ளது. அதை கைவிட வேண்டும். மாநில அரசின் திட்டங்களுக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். மொத்த தொழிலாளர்களில் 94 விழுக்காடு வரை முறைசாராத் தொழிலாளர்கள் உள்ளனர். ஆகவே, கட்டுமானம், வீட்டு வேலை, ஆட்டோ உள்ளிட்ட உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு ஆட்சியர் தலைமையிலான குழு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியம் 21 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதனை ஒன்றிய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்” என்றார். இதனைத் தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையரை சந்தித்து தலைவர்கள் மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன், மாவட்ட நிர்வாகிகள் எம்.சந்திரன், சி.திருவேட்டை, எஸ்.சந்தானம் (மத்திய சென்னை), ஆர்.ஜெயராமன் (வடசென்னை), ஏ.பழனி (தென்சென்னை), பி.சுந்தரம் (தையல்), உமாபதி (ஆட்டோ), லூர்துசாமி, ம.உதயகுமார் (கட்டுமானம்), அருள்குமார், நீலமேகம் (சுமைப்பணி), அனில்குமார் (முறைசாரா), ஜெயந்தி (மெப்ஸ்) உள்ளிட்டோர் பேசினர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலை மையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், தையல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.நடேசன், ஆட்டோ தொழி லாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன், கட்டு மான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜே.ராபர்ட்எபிநேசர், பொது தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் சுமதி, ராமசாமி, விசைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பிருந்தாவனம் உள்பட பலர் பேசினர்.
அ.சவுந்தரராசன்
இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.சவுந்தரராசன் பேசுகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதியில் 80 விழுக் காட்டை நிறைவு செய்துவிட்டதாக கூறுகிறார். ஆனால் தொழி லாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதியில் 1 விழுக்காடு கூட நிறைவேற்றப்படவில்லை, ஆகவே தொழிலாளர்களின் நல னுக்காக அவர்களிடம் வழங்கிய குறைந்தபட்ச கோரிக்கை களை யாவது உடனே நிறைவேற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார்.