சென்னை, நவ.17- ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை அனை வரும் ஒன்றிணைந்து முறியடிப் போம் என பாதுகாப்புத் துறை ஊழி யர் சங்க மாநாட்டில் தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர். அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளனத்தின் 27ஆவது தேசிய மாநாடு கான்பூ ரில் செவ்வாய் மற்றும் புதனன்று (நவ. 15, 16) நடைபெற்றது. தலை வர் எஸ்.என்.பதக் சங்கக் கொடி யை ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டு அனைத்து தொழிற்சங்க தலை வர்கள் பேசுகையில், பாஜக அரசு பின்பற்றி வரும் பாசிச பிற்போக் குக் கொள்கைகளை விமர்சித்த னர். 41 ஆயுதத் தொழிற்சாலை களை கார்ப்பரேட் மயமாக்குதல், தனியார்மயமாக்கல் மற்றும் பாது காப்புத் துறையில் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும் பப் பெற வேண்டும், காலிப் பணி யிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் பாதுகாப்பு நிறுவனங்க ளில், டிரேட் அப்ரண்டீஸ்களுக்கு நியமனம் வழங்க வேண்டும், இறந்த ஊழியர்களின் குடும்பத் தில் ஒருவருக்கு கருணை அடிப்ப டையில் பணி வழங்க வேண்டும், அனைத்து பாதுகாப்பு சிவில் ஊழி யர்களுக்கும் தொழிற்சங்க உரிமை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதி ராக சாதி, மதம் கடந்து அனைவ ரும் தொழிலாளர்கள் என்ற அடிப்ப டையில் ஒன்றுபட்டு போராட முன் வர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். முன்னதாக சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன் சென், ஏஐடியுசி தேசிய பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர் ஆகி யோர் அனுப்பிய வாழ்த்துச் செய்தி யை மாநாட்டில் இணைச் செயலா ளர் ஜி.டி.கோபால் ராவ் வாசித் தார். இதில் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார், கூடுதல் பொதுச் செயலாளர் பி.குஹா தாகுர்தா, துணைத் தலைவர் ஹர் பஜன் சிங் சித்து ஆகியோரும் பேசினர். முன்னதாக வரவேற்புக் குழுத் தலைவர் சாபிலால் யாதவ் வரவேற்றார். வரவேற்புக் குழு பொருளாளர் எஸ்.கே.சாகு நன்றி கூறினார்.