தேசிய கல்விக் கொள்கையை (2020) திரும்பப் பெற வலியுறுத்தி ஞாயிறன்று (அக்.15) சென்னையில் கல்விப் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. 36 அமைப்புகள் இணைந்து உருவாக்கியுள்ள ஜனநாயக கல்விப் பாதுகாப்பு கூட்டியக்கம் இந்த மாநாட்டை நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘கல்வி - இந்துத்துவா - தேசியக் கல்விக் கொள்கை-2020’ எனும் நூலையும், பிரச்சாரத்திற்கான பிரச்சார அட்டைகளையும் கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து வெளியிட்டார். (விபரம் : 5)
சென்னை, அக்.15 பாஜவை தோற்கடிப்பது வரலாற்றுக் கடமை என்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னையில் சனிக்கிழமை மாலை திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி, கனிமொழி எம்.பி., உட்பட இந்தியா கூட்டணி கட்சிகளின் மகளிர் இயக்க தலைவர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் மு.க.ஸ்டாலின் ஆற் றிய உரையின் பகுதிகள் வருமாறு: பா.ஜ.க.வை ஒற்றுமையின் மூல மாக மட்டுமே வீழ்த்த முடியும். தமிழ்நாடு இதை 2019 தேர்தல் முதலே நிரூபித்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ளது போல ஒன்றுபட்ட கூட்டணி இந்தியா வின் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட வேண்டும்.
ஒன்று பட்டு வீழ்த்துவோம்!
பா.ஜ.க.வை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் நமக்கிடையே யான சிறிய வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு நின்றால், நம்மால் நிச்சயம் இந்திய மக்களுக்கு எதிரான சக்தி யான பாஜகவை வீழ்த்த முடியும். பாஜகவை தோற்கடிப்பது என்பது, இந்தியாவில் இயங்கும் அனைத்து ஜன நாயக சக்திகளின் வரலாற்றுக் கடமை. பாஜக ஆட்சியில் அனைத்து மக்க ளது உரிமைகளும் பறிக்கப்பட்டு விட்டன. இன்றைக்கு நாம் பார்க்கும் நாடாளுமன்ற அமைப்பு முறை இருக்குமா; மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் மக்களாட்சி இருக்குமா என்ற கேள்வி பெரிதாக எழுந்து வருகிறது. ஒரே நாடு - ஒரே மொழி - ஒரே மதம் - ஒரே பண்பாடு - ஒரே தேர்தல் - ஒரே தேர்வு - ஒரே உணவு என்ற பெயரால் ஒற்றைக் கட்சி ஆட்சியைக் கொண்டு வரப்பார்க்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அது நடந்தால், ஒரே மனிதர் என்ற எதேச்சதிகாரத்துக்கு அது வழி வகுக்கும். எனவேதான் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை முற்றிலுமாகத் தோல்வி அடையச் செய்ய வேண்டும்.
பெண்களை ஏமாற்றும் மோடி அரசு
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பெண்களை ஏமாற்ற, மகளிருக்கு நாடாளுமன்றம் - சட்டமன்றங்களில் 33 விழுக்காடு இட ஒதுக்கீடு என்று சட்டம் கொண்டு வந்த தைப் போல ஏமாற்றுகிறார்கள். 33 விழுக்காடு இடஒதுக்கீடு பெண்களுக்கு கிடைத்துவிடக் கூடாது என்ற சதி எண்ணத்தோடுதான் இந்தச் சட்டத்தையே பா.ஜ.க. கொண்டு வந்தி ருக்கிறது என்று நான் கருதுகிறேன். மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிந்த பிறகு - அதை வைத்து தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு - என்று சொல்கிறார்கள். 2029-ஆம் ஆண்டு தான் இந்த இடஒதுக்கீடு கிடைக்கும் என்றும், 2034-ஆம் ஆண்டு கூட ஆக லாம் என்றும் கணக்கிட்டுச் சொல்கிறா ர்கள். எதுவாக இருந்தாலும் 2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடி வுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.
பாஜகவின் அரசியல் தந்திரம்
1996-ஆம் ஆண்டு தி.மு.க. - காங்கி ரஸ் ஆதரித்த ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டபோது இந்த நிபந்தனைகளை நாம் விதிக்கவில்லை. 2010-ஆம் ஆண்டும் நமது கூட்டணி அரசு இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்தபோதும் இது மாதிரியான நிபந்தனைகளை விதிக்கவில்லை. இப்போது பா.ஜ.க. நிபந்தனை போடுகிறது என்றால் அவர் கள் உண்மையான அக்கறையுடன் இத னை கொண்டு வரவில்லை. இதை பா.ஜ.க.வின் அரசியல் தந்திர மாக மட்டுமல்ல, அரசியல் சதியாகவும் தான் பார்க்க வேண்டியுள்ளது. இதனை நாம் சுட்டிக் காட்டினால், ஒரு அரிய கருத்தைப் பிரதமர் அள்ளி விடுகிறார். அதாவது, பெண்களை சாதிரீதியாகப் பிளவுபடுத்தப் பார்க்கிறோமாம். சாதி ரீதியாக, மதரீதியாக மக்களைப் பிளவு படுத்துவது யார் என அனைவருக்கும் தெரியும்.
அனைவருக்குமான இந்தியா
இந்தியா கூட்டணி என்பது தேர்தல் கூட்டணியாக மட்டுமல்ல - கொள்கைக் கூட்டணியாக அமைந்துள்ளது. சமூக நீதி - மதச்சார்பின்மை - மாநில சுயாட்சி - கூட்டாட்சிக் கருத்தியல் அனைவர்க்கு மான அரசியல் பங்கீடு என்ற கோட்பாடு களைக் கொண்டதாக இந்தியா கூட் டணி அமைந்துள்ளது. இந்தியா கூட்ட ணியை வெற்றி பெற வைப்பதன் மூல மாக மகளிர் உரிமை மட்டுமல்ல - அனை த்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்கும் இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.