tamilnadu

img

இது போராட்டங்களின் ஆண்டு; இந்திய தொழிலாளி வர்க்கமே எழுக!

இந்திய மக்களும் 21 மகா கோடீஸ்வரர்களும்

பணம் படைத்த முதல் பத்து சதவீதம் பேர் நாட்டின் மொத்த வருமானத்தில் 72சதவீதத்தை தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள். இன்னும் குறிப்பாக அவர்களில் உச்சக்கட்டத்தில் உள்ள வெறும் ஒரே ஒரு சதவீதம் பேர் நாட்டின் மொத்த வருமானத்தில் 40.5 சதவீதத்தை தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள். மறுபுறத்தில் நாட்டின் மக்களில் வேலைவாய்ப்பும் வருமானமும் இன்றி துயரில் தவிக்கும் பெருவாரியான அடித்தட்டு மக்களில் 50சதவீதம் பேரிடம் நாட்டின் மொத்த வருமானத்தில் வெறும் 3சதவீதம் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. மகாகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை பெருந்தொற்றுக் காலத்திற்கு முன்பு 100 இருந்தது. தற்போது 166ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் வெறும் 21 மகா கோடீஸ்வரர்கள் குவித்துள்ள செல்வமானது, இந்திய மக்கள் தொகையில் 70சதவீதம் பேர் ஒட்டுமொத்தமாக எவ்வளவு செல்வம் வைத்திருக்கிறார்களோ அதற்கு இணையானது.

புதுதில்லி, ஜன.31- இந்திய தொழிலாளி வர்க்கத்தின் நலன் ளைப் பாதுகாக்க 2023ஆம் ஆண்டு முழுவதும் போராட்டங்களின் ஆண்டு என்று, தில்லியில் நடைபெற்ற தேசிய தொழிலாளர் சிறப்பு மாநாடு பிரகடனம் செய்தது.  மத்தியத் தொழிற்சங்கங்களின் சார்பில் தொழிலாளர்கள் சிறப்பு மாநாடு, மகாத்மா காந்தி கொல்லப்பட்ட தியாகிகள் தினமான ஜன. 30  (திங்கள் கிழமை), தலைநகர் தில்லியில் நடை பெற்றது. மோடி அரசாங்கம் மேற்கொண்டுவரும் தொழிலாளர் விரோத,  விவசாயிகள் விரோத, மக்கள் விரோத மற்றும் தேச விரோதக் கொள்கை களுக்கு எதிராக எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட இந்த சிறப்பு மாநாட்டில் விவாதங்கள்  நடைபெற்றன.  சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐயுடியுசி, டியுசிசி, சேவா, ஏஐசிசிடியு, தொமுச, யுடியுசி ஆகிய மத்தியத் தொழிற் சங்கங்கள் மற்றும் மத்திய-மாநில வங்கி,  இன்சூரன்ஸ் ஊழியர் சங்கங்களின்  தலைவர் களும் விவாதத்தில் பங்குகொண்டனர்.

பின்னர் சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட பிரகடனம் வருமாறு:

மோடி அரசாங்கம் 2014இல் இருந்து பின்பற்றிவரும் கொள்கைகளின் விளைவாக, நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களின் வாழ் வாதாரங்கள் கற்பனைசெய்ய முடியாத அள விற்கு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்  ளன. வேலையிழப்புகளும், வேலையின்மை யும் மிக வேகமாக அதிகரித்துக் கொண்டிருக் கின்றன. ஆட்சியாளர்கள் கொண்டுவந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை மக்களின் வாழ்வாதா ரங்கள் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தது. வறுமை, பொருளாதார மந்தநிலைமையை மேலும் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வேலையிழப்புகளும், வேலையின்மையும் மிக மோசமான  அளவில் இளைஞர்களைப் பாதித்துள் ளது. அதீத விலைஉயர்வுகளும், உண்மை ஊதி யத்தில் வீழ்ச்சியும் சாமானிய மக்களை மேலும் வறுமைக்குழிக்குள் தள்ளியுள்ளது. இவற்றுக்கெதிராக அகில இந்திய வேலை நிறுத்தங்கள் மேற்கொண்டு அரசின் கவனத்தை ஈர்த்தபோதிலும், அரசாங்கம் முற்றிலுமாக இப்பிரச்சனைகளைச் சட்டை செய்யாமல் இருந்து வருகிறது. இவ்வாறு பொறுப்பற்ற முறையில் இருப்பதோடு மட்டுமல்லாமல், இதே கொள்கையையே தொடர்ந்து மூர்க்கத்தன மாகப் பின்பற்றி வருகிறது.

லட்சக்கணக்கில் காலியிடங்கள்

பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை. அரசுப் பணியிடங்கள் லட்சக்கணக்கில் காலியாக இருக் கின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் பல தனி யாரிடம் தாரை வார்க்கப்பட்டுக்கொண்டு அல்லது விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைபார்ப்பவர்களும் வீதியில் தூக்கி  எறியப்படும் நிலை உருவாகி இருக்கிறது. வேலை யிழப்புகள் காரணமாக ஒப்பந்தத்தொழிலாளர் கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை  உறுதித்திட்டத்தை ஆண்டிற்கு 200 நாட்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்றும், ஊதியத்தை  உயர்த்திட வேண்டும் என்றும் இதேபோன்ற தொரு திட்டம் நகர்ப்புறத்திற்கும் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கோரி வருகிறோம். எனினும் அரசாங்கம், ஏற்கெனவே நடை முறையில் இருக்கும் திட்டத்திற்கான நிதி ஒதுக் கீட்டையே கடுமையாக வெட்டிக் குறைத்திருக் கிறது. இதனால் வேலைநாட்கள் 50க்கும் கீழே சென்றுவிட்டது.

அங்கன்வாடி ஊழியர்கள் போன்ற திட்டப் பணியாளர்கள் அனைவரும் நிரந்தர அரசு ஊழி யர்களாக மாற்றப்பட்டு, காலமுறை ஊதியம் அளிக்கப்பட  வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறோம். ஆனால் அரசாங்கம் இவை தொடர் பாக, சில மேற்பூச்சு வேலைகள் செய்வதைத் தவிர அடிப்படையில்  இதனைக் கண்டு கொள்ளவே இல்லை. மறுபுறத்தில் கார்ப்பரேட் பெரும் நிறுவனங்  களுக்கு அளவில்லாத சலுகைகள்; சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மீதான கொடிய தாக்குதல் கள் மற்றும் அவற்றைத் திட்டமிட்டு அழித்திருக் கும் அவலநிலை; உற்பத்தி உள்ளிட்ட அம்சங் களில் சுயசார்பை இழந்து பெருவாரியாக இறக்குமதியை நம்பியிருக்கும் அவலம்; நாட்டின் தொழில் உற்பத்தி அடித்தளத்தை நொறுக்கியிருக்கும் பயங்கரம் உள்ளிட்ட மோடி அரசின் நடவடிக்கைகள் பெருவாரியான மக்களின் வாழ்வாதாரங்கள் மீது கொடிய தாக்குதலாக மாறியுள்ளது. இதன் விளைவாக இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிதீவிரமான முறையில் வருமான ஏற்றத்தாழ்வு கூர்மையடைந்துள்ளது.  அதிகரிக்கும் பசி, பட்டினி, வறுமை, குழந்தைகளின் நலன் பாதிப்பு, பெண்கள் நலன்  புறக்கணிப்பு, மனித உரிமைகள் மலினப்படுத்தப் படுவது என மோடி அரசு இந்திய மக்களை துயரத்தின் விளிம்பில் தள்ளியுள்ளது.

போராட்டங்களின் ஆண்டு

இவ்வாறு மோடி அரசு தொடர்ந்து தொழிலா ளர் விரோத, விவசாயிகள் விரோத மக்கள் விரோத, தேச விரோதப் பாதையில் செல்வதைக் கண்டிக்கும் விதத்திலும், மத்தியத் தொழிற் சங்கங்கள் ஏற்கனவே வரையறுத்து ஆட்சியாளர் களுக்கு அளித்துள்ள 14 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தியும், 2023ஆம் ஆண்டை போராட்டங்களின் ஆண்டாகக் கருதி ஆண்டு முழுவதும் பிரச்சாரங்கள் மற்றும் கிளர்ச்சி நட வடிக்கைகளை மேற்கொள்வது என தேசிய சிறப்பு மாநாடு முடிவு செய்து, கீழ்க்கண்ட விதத்தில் இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வது என்றும் முடிவு செய்துள்ளது.

*    மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரையிலும் மாநில, மாவட்ட, ஒன்றிய, துறைவாரி அளவில் சிறப்பு மாநாடுகளை நடத்துவது.

*    ஜூன் மாதத்திற்குப்பின் பாத யாத்திரைகள்/ஜீப் பிரச்சாரப் பயணங்கள் /சைக்கிள் பேரணிகள்/மோட்டார் பைக் பேரணிகள் முதலானவற்றை நடத்துவது.

*    இவற்றின் இறுதியாக வெள்ளையனே  வெளியேறு இயக்கம் நடைபெற்ற தினமான ஆகஸ்ட் 9 அன்று மாநில அளவில் மகாபாதவ் என்னும் மகாமுற்றுகைப் போராட்டத்தை மேற்கொள்வது. துறைவாரியான போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைகளையும் வளர்த்தெடுப்பது.

*    தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்ற சமயத்தில் உருவானதுபோன்று தொழிலாளர்-விவசாயிகள் ஒன்றுமையை மேலும் வலுப்படுத்திட வேண்டும். இந்த ஆண்டு கூட்டு இயக்கங்களை நடத்திட வேண்டும்.

*    இவற்றைத் தொடர்ந்து இந்த ஆண்டின் இறுதியில் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளும் விதத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. தேசிய சிறப்பு மாநாட்டில் சிஐடியு தலை வர்கள் டாக்டர் ஹேமலதா, தபன்சென், ஆர்.கரு மலையான் முதலானவர்கள் பங்கேற்றார்கள். (ந.நி.)