சென்னை, ஜன. 1- நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டங்களுடன் 2023ஆம் ஆண்டு பிறந்தது. மக்கள் பெரும் திரளாக ஆடிப்பாடி புத்தாண்டை வரவேற்றனர். நாடு முழுவதும் சனிக்கிழமை (டிச.31) மாலை முதலே புத்தாண்டு உற்சாகம் களை கட்டத் தொடங்கியது. வழி பாட்டுத் தலங்கள், கடற்கரை ரிசார்டு கள், சுற்றுலாத் தலங்களில் பெரும் திரளாக மக்கள் கூடி னர். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் உற்சாகம் கரை புரண்டது. ஹேப்பி நியூ இயர் என உற்சாக முழக்கத்துடன் ஒருவருக் கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். சென்னை மெரினா கடற்கரை யில் புத்தாண்டையொட்டி கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தது. இருப்பினும் மணிக்கூண்டு அருகே ஏராளமா னோர் திரண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் புத்தாண்டை ஆரவாரத்துடன் வரவேற்றனர். வான வேடிக்கைகளைக் கண்டு பார்வையாளர்கள் உற்சாக மடைந்தனர்.
மகாபலிபுரம் கடற்கரையில் ஞாயிறன்று ஏராளமானோர் குடும்பத்துடன் திரண்டு புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். இங்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் விடுதியில் விளையாட்டு போட்டி கள், நடனம், பேஷன் ஷோ, உணவுத் திருவிழா போன்றவை யும் நடைபெற்றது. சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் தொடர் விடு முறையால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரு மளவில் குவிந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அதேபோல் புதுச்சேரி கடற்கரையில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். புத்தாண்டு பிறந்ததும் மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். புத்தாண்டையொட்டி கிறித்துவ தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்டி ருந்தன. நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். ஒருவருக்கொரு வர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர். புத்தாண்டையொட்டி காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்டு மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு, கோவில்களுக்கு மக்கள் திரண்டனர். கொரோனா தொற்று பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக களையிழந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.