சென்னை, நவ. 9 - ஊடக அலுவலகத்தில் (மீடியா அவுஸ்) பணியாற்றும் அனைத்து வகையான ஊழியர்களும் பத்திரிகையாளர் நலவாரியத்தில் உறுப்பினராக சேரலாம். தமிழ்நாடு பத்திரிகையாளர் நலவாரியத்தின் 3வது கூட்டம் புதனன்று (நவ.9) தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செய்தித் துறை அமைச்சரும், வாரியத்தின் தலைவருமான மு.பெ.சாமி நாதன் தலைமை தாங்கினார். அப்போது, பணியின்போது இயற்கை எய்திய பத்திரிகை யாளர்கள் 11 பேரின் குடும்பத் திற்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியு தவி வழங்கினார். இதனைத் தொடர்ந்து நடை பெற்ற கூட்டத்தில் வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. அங்கீகார அட்டை, செய்தியாளர் அட்டை, இலவச பேருந்து பயண அட்டை பெற்றவர்கள் முதற் கட்டமாக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து, பத்திரிகை அலுவலகத்தில் பணியில் சேர்ந்து 3 ஆண்டுகளை கடந்து தொடர்ச்சி யாக பணியாற்றி வரும் அனைவரையும் உறுப்பினராக சேர்ப்பது என்று முடிவெடுக்கப் பட்டது. பணி ஓய்வு பெற்ற 10 பத்திரி கையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும், 4 பேருக்கு குடும்ப உதவி நிதி வழங்கவும், வாரியக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், தொலைக் காட்சி செய்தியாளர் கள் ஊதியக்குழு வரம்பிற்குள் இல்லாததால், ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. இந்த நிபந்தனையிலிருந்து விலக்கு கோரவும் முடிவு செய்யப்பட்டது. இந்தக்கூட்டத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்கு நர் வீ.ப. ெஜயசீலன், கூடுதல் இயக்குநர்கள் சிவ.சு.சரவணன், மு.ப.அன்புச்சோழன் மற்றும் நலவாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.