tamilnadu

img

பாமக எம்எல்ஏ மீது மருமகள் வரதட்சணை புகார்

சேலம், ஆக.22- மருமகளிடம் வரதட் சணை கேட்டு கொடுமை படுத்தியதாக பாமக மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது 6 பிரிவின்  கீழ் சூரமங்கலம் மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  சேலம் மாநகர், சூரமங்க லம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோலியா (24). இவருக்கும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த மேட்டூர்  தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பாமகவை சேர்ந்த சதா சிவத்தின் மகன் சங்கருக் கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

தற்போது இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சங்கர் மனைவி மனோலியாவை தொடர்ந்து தாக்குதல் நடத்தி  மன உளைச்சலை ஏற்படுத்தி யதாக கூறப்படுகிறது.  இச்சம்பவத்தின் பின்னணியில், சங்கரின்  பெற்றோர்களும் உடந்தை யாக இருந்துள்ளனர். மேலும், இவர்களும் இழி வாக பேசியதோடு, கொலை  மிரட்டல் விடுத்ததாக கூறப்ப டுகிறது.  இந்நிலையில், மனோ லியா சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளார். அம்மனு வில், கணவர் சங்கர் மற்றும் மாமனார் சதாசிவம், மாமியார் பேபி, நாத்தனார் கலைவாணி ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்ததாக  கூறி உள்ளார். இந்த புகாரின்  அடிப் படையில், காவல்துறையி னர் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் அவரது மனைவி பேபி, மகன் சங்கர், மகள் கலைவாணி,  ஆகிய 4 பேர் மீது கொலை முயற்சி, ஆபாசமாக தீட்டுதல், பெண் கள் மீதான வன்கொடுமை, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ள னர். இந்நிலையில், பாமக சட்டமன்ற உறுப்பினர், குடும்பத்தினடன் தலை மறைவாகியுள்ளார். இதை யடுத்து, சட்டமன்ற உறுப்பி னர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து, சட்டப்பேரவை தலைவருக்கு சேலம் மாநகர காவல் துறையினர் கடிதம் அனுப்பி உள்ளனர்.