tamilnadu

10 விழுக்காடு இட ஒதுக்கீடு வெகுஜன மக்களுக்கு ஆபத்து ஆதித்தமிழர் பேரவை கருத்து

சென்னை,நவ.8- பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு வழங்கிய 10 வி ழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சமூக நீதியை சீர்குலைக்கும் என்று ஆதித்தமிழர் பேரவை கூறி யுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் இரா.அதிய மான் வெளியிட்டிருக்கும் அறிக்கை: ஒன்றிய பாஜக அரசு பொறுப் பேற்றதிலிருந்து ஓபிசி மற்றும் எஸ்சி,எஸ்டி மக்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்து வதில் பல இடங்களில் அலட்சியம் காட்டி வந்திருக்கிறது. இப்போது வரை ஐஐடி,ஐஐஎம், ஐஐஎஸ்சி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுகீடு பின்பற்றப் படாமல் உயர் வகுப்பினரே அனுபவித்து வருவதை காண முடிகிறது. இந்த நிலையில் தான் மாதத்திற்கு  ரூ. 65000 ஈட்டும் உயர்வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அறிவித்தது ஒன்றிய பாஜக அரசு. வெகுஜன மக்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது. இது சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரான மாபெரும் அநீதியாகும். மேலும்,  சமுதாய தீண்டாமையை கடை பிடிக்கும் நடைமுறையாகும். 3 விழுக்காடு அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை உறுதி செய்யாமல் இழுத்தடிக்கும் உச்ச நீதி மன்றம்,  உயர் வகுப்பினருக்கான 10 விழுக் காடு விவகாரத்தில் மட்டும் விரை வில் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. சட்டம் எளியவரை எட்டி உதைப்ப தும், வலியவர்க்கு வளைந்து கொடுப்பதை கண் முன்னே இந்த தீர்ப்பு காட்டியிருக்கிறது. எனவே, சமூக நீதிக்கு எதிராக இந்திய அள வில் ஓங்கி ஒலித்திருக்கும் அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய முன்  வர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.