tamilnadu

img

தேங்காய் விலை கடும் வீழ்ச்சி : தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பு

தஞ்சாவூர், ஜூலை 30 - தேங்காய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பேரா வூரணி, பட்டுக்கோட்டை ஓரத்த நாடு வட்டங்களில் நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறை, வேலை ஆட்கள் கிடைப்பதில் சிரமம் போன்ற கார ணங்களால் பெரும்பாலான விவ சாயிகள் நெல் சாகுபடி நிலங்களில் தென்னை பயிரிட்டனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஓரளவுக்கு வருமானம் கிடைத்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற் பட்ட கஜா புயலால் பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதிகளில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் தென்னை  விவசாயிகள்  நஷ்டத்துக்குள்ளாகி னர். அரசு வழங்கிய இழப்பீடு, நிவா ரண உதவிகள் மூலம் தென்னை பயிரிட்டனர். அண்மைக்காலமாக தேங்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு தேங்காய் ரூ.7-க்கும், ரூ.8-க்கும் விற்கிறது. இதனால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள தென்னை விவசாயிகள் தங்களுக்கு  அரசு உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கிழக்கு கடற்கரை தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகி ஆவணம் அடைக்கலம் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு, தென்னை விவ சாயிகளைக் காப்பாற்ற நட வடிக்கை எடுக்காவிட்டால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். நியாயவிலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் உணவுத் தயாரி ப்புக்கு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். கூட்டுறவுத்துறை மூலம் உரித்த தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.