tamilnadu

img

திருவையாறு சூறாவளி காற்றால் அறுவடைக்கு தயாரான 10 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

தஞ்சாவூர், ஏப். 3 - திருவையாறு பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றால், அறுவடைக்கு தயாரான 10 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. தஞ்சாவூர் மாவட்டத்தில், காவிரி  சமவெளி பகுதிகளில் நெல் சாகு படிக்கு அடுத்தபடியாக, திருவை யாறு, திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை சுமார் அரைமணி நேரம் வீசிய சூறாவளி காற்றால், திருவையாறு அருகே வடுககுடி, ஆசனூர், மருவூர் உள்ளிட்ட பகுதிகளில், அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சுமார் 10 ஆயிரம் வாழைமரங்கள் முறிந்து கிழே விழுந்தன. இதனால் 50 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வாழை விவசாயிகள் வேதனை தெரி வித்துள்ளனர். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட வாழை உற்பத்தியாளர் சங்க தலை வர் மதியழகன் கூறுகையில், “நெல்லிற்கு ஒரு சதவீதம் பயிர் இன்சூரன்ஸ் தொகைக்கு பீரியம் செலுத்துவது போல, வாழைக்கு விவ சாயிகள் 6 சதவீதம் பீரியம் செலுத்து கின்றனர். ஆனால், தோட்டக் கலைத்  துறையினர் பேரிடர் அல்லது 50 சத வீதத்திற்கு மேல் பாதிப்பு இருந்தால்  மட்டுமே கணகெடுப்பு செய்து இன்சூரன்ஸ் தொகையை வழங்கு கிறார்கள். மழை, காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால், தோட்டக்கலைத் துறை யினர் இழப்பீடு வழங்குவது குறித்து  கண்டுகொள்வது கிடையாது. தற்போது சூறாவளியால் பாதிக்கப் பட்ட வாழை மரத்திற்கு, தோட்டக் கலை துறையினர் எந்த காரணமும் கூறாமல், இழப்பீடு வழங்க வேண்டும்.  எங்களின் நீண்ட நாள் கோரிக்கை யான, நெல்லிற்கு இயற்கை சீற்றங்களின்போது நேரத்திற்கு இன்சூரன்ஸ் வழங்குவது போல, வாழைக்கும் இன்சூரன்ஸ் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.