tamilnadu

img

புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்களை பலியிட்டு ஆதாயம் தேடியவர்தான் பிரதமர் மோடி

சின்னாளப்பட்டி, ஏப்.14- புல்வாமா ராணுவ தாக்குத லில் தேசம் காத்த ராணுவ வீரர்க ளின் உயிர்ப்பலியில் உலகளவில் ஆதாயம் தேடியவர் தான் பிரதமர்  நரேந்திர மோடி என்று சின்னாளப் பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக வாழ்வு ரிமை கட்சி தலைவர் தி.வேல்முரு கன் எம்எல்ஏ பேசினார்.  திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந் தத்தை ஆதரித்து தமிழக வாழ்வு ரிமை கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் சின்னாளப்பட்டி பூஞ்சோலையில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு திமுக ஆத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன் தலைமை வகித்தார். நகரச் செய லாளர் மோகன்ராஜ் வரவேற்றார். சின்னாளப்பட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபா கனக ராஜ், துணைத்தலைவர் ஆனந்தி பாரதிராஜா, பேரூர் கழக முன்னாள்  செயலாளர்கள் பாலகிருஷ்ணன், அறிவழகன், முன்னாள் பேரூ ராட்சி மன்ற துணைத்தலைவர் எம்.வி.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பிரச்சாரத்தில் தமிழக வாழ்வு ரிமை கட்சி தலைவர் தி.வேல்முரு கன் பேசுகையில், ‘‘இப்போது நடைபெறும் தேர்தலில் மிகவும் முக்கியமானது. இந்தியாவை ஒரு பேராபத்து சூழ உள்ளது. அதற்கு காரணம் பாஜக ஆட்சியே. பிரதமர் மோடி புல்வாமா தாக்குதலின் போது தேசம் காத்த ராணுவ வீரர் களைக் கொன்று அதில் ஆதாயம் தேடியவர்.  இன்று தமிழர்கள் எதையெல் லாம் வாழ்வாதாரமாக வைத்தி ருந்தார்களோ அதையெல்லாம் வட இந்தியர்கள் கைப்பற்றி வரு கின்றனர். குறிப்பாக தமிழர்கள் வசம் இருந்த மஞ்சள், கைத்தறி, பூட்டு. எனது ஊரான பண்ருட்டி யின் முந்திரி இப்படி அனைத்தும் கார்ப்பரேட்டுகள் வசம் போய் விட்டது. 

ஒன்றிய அரசு பணிகளான ரயில்வே, தபால் அலுவலகம், வங்கி பணிகள், நெய்வேலி அனல் மின்சார நிலைய பணிகள் உட்பட அனைத்து பணிகளிலும் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந் நிலைமை மாற நாம் மத்தியில் மோசமான ஆட்சி நடத்தும் பாஜக ஆட்சியை விரட்ட வேண்டும்’’ என்றார்.  பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் க.ரூபன் சுந்தர், மாவட்டத் தலைவர் எஸ்.செல் லப்பாண்டி, பொருளாளர் பிலிப் தாஸ், திமுக ஆத்தூர் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் சிவக்குமார், துணை செயலாளர் கள் வசந்தா கென்னடி, எம்.சி.பாண்டியன், ராஜேந்திரன், ஒன்றி யப் பொருளாளர் தொப்பம்பட்டி கருப்பையா, மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி ராஜகணேஷ், ஆத்தூர் ஒன்றிய தமிழக வாழ்வுரிமை கட்சி செயலாளர்  க.பாலமுருகன், தலைவர் வேளாங்கண்ணி, பொரு ளாளர் எம்.ரமேஷ், பேரூர் கழக செயலாளர் ஆரோக்கிய சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அருள்செல்வன், தமிழக வாழ்வு ரிமைக் கட்சி ரூபன் சுந்தர், பிளிப்தாஸ், நந்தகுமார், வேளாங் கண்ணி, பாலமுருகன் மற்றும் திமுக ஒன்றிய பிரதிநிகள் வடக்கு தெரு சந்திரன், மேட்டுப்பட்டி தங்க துரை, ரவி தண்டபாணி மற்றும் கிளைச்செயலாளர்கள் சைக்கிள் கடை மணி, ஆர்.எஸ்.முருகன், 8-ஆவது வார்டு செயலாளர் முருகன்  உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.