tamilnadu

img

வடிகால் கட்டுவதற்கு அனுமதி கோரி ஊராட்சி தலைவர், மாவட்ட கவுன்சிலர் முற்றுகை

தேனி, மார்ச் 11- ஆண்டிபட்டி அருகே டி. ராஜகோபாலன்பட்டி ஊரா ட்சிக்கு உட்பட்ட சத்யா நகர்  பகுதியில் வடிகால் கட்டுவ தற்கு அனுமதி வழங்கக் கோரி‌ ஊராட்சி‌ மன்ற‌ தலை வர் மற்றும் மாவட்ட கவுன் சிலர் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். ஆண்டிபட்டி  ஒன்றியம் டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சத்யா  நகர் பகுதியில் ‌வடிகால் கட்டு வதற்காக கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பள்ளம் தோண்  டப்பட்டது. பள்ளம் தோண் டும் போது வீடுகளுக்கு செல்  லும் குடிநீர் குழாய் சேதம டைந்ததாக கூறப்படுகிறது. வடிகால் பணிகள் முடிவ தற்குள் தோண்டப்பட்ட பள்  ளத்தில் கழிவுநீர் விடப்பட்ட தால், சாக்கடை கழிவுநீர் குழாய் வழியாக அனைத்து வீடுகளுக்கும் சென்று விட்டது. குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால் ஊராட்சி  நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். பின்னர் ஊராட்சி நிர்வாகத்தின் ஊழியர்கள் குழாயில் ஏற்பட்ட உடை ப்பை சரி செய்தனர். ஆனால்‌ அந்த பள்ளத்தில்‌‌ கழிவுநீர்‌ அதிகளவு தேங்கி வருவ தால், 30 லட்சம் ரூபாய் மதிப்  பீட்டில் வடிகால் கட்டுவ தற்கான அரசு அனுமதி ஆணை  வழங்க வலியுறுத்தி ஊராட்சி  மன்ற தலைவர் வேல்மணி மற்றும் அவரது கணவரான திமுக மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் தலைமையில் கவுன்சிலர்கள், பொது மக்கள் என‌ ஏராளமானோர் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் உள்ள வட்டார வள ர்ச்சி அலுவலர் அலுவலக வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  வடிகால் கட்டுவதற்கு அனுமதி ஆணை வழங்கும் வரை தொடர்ந்து தர்ணா  போராட்டத்தில் ஈடுபடு வோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  தெரிவித்த னர். பின்னர் ஆண்டிபட்டி  காவல் சார்பு ஆய்வாளர் சுல்தான் பாஷா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பால கிருஷ்ணன், மலர்விழி ஆகி யோர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.  பின்னர் செயற்பொறியாளர் முருகன் தலைமையில் திங்கள்  கிழமை பேசி முடிவெடுக் கப்பட்டு ஆணை வழங்கு வதற்கு நடவடிக்கை எடுக்  கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்த பிறகு  போரா ட்டத்தை கைவிட்டனர்.