30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம்
பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி
இன்குலாப் ஜிந்தாபாத் என்று அவரது முழக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக் குழு அலுவலகத்தில் கடைசியாக ஒலித்தது, இந்த ஆண்டு புரட்சி தினத் தன்று! நவம்பர் 7 அன்று இந்திய கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலை வர்களின் நினைவு கொண்டாடப்பட்ட நாள் அது; மேம்படுத்திப் புதுப்பிக்கப் பட்ட கட்டடத்தில் தோழர் பி. ராம மூர்த்தி அவர்களது சிலை திறப்பும், தோழர் எம். ஆர். வெங்கட்ராமன் நினைவு அரங்கத் திறப்பும் நிகழ்ந்த அன்று அவரது பங்கேற்பும் தோழர் களால் எதிர்பார்க்கப்பட்டிருந்தது, நேரில் வர இயலாத நிலையிலும் அவ ரது வாய்மொழிப் பதிவு அங்கே கணீர் என்று எதிரொலித்தது. முன்னோடித் தலைவர்களின் புகழையும், ரஷ்யப் புரட்சியின் பெருமையையும் சுருக்க மாகக் குறிப்பிட்டு, விரிவாக்கம் செய்யப் பட்ட கட்டடத்தில் கட்சிப் பணிகள் மேலும் சீரிய முறையில் முன்னெடுக்கப் படும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்திய வேகத்தில், புரட்சி நீடூழி வாழ்க என்ற உணர்ச்சிகர முழக்கத் தோடு தான் அந்தச் சிற்றுரையை நிறைவு செய்திருந்தார். நவம்பர் 15 மாலை நாலரை மணிக்கு அதே கட்டடத்தில் இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கமும், செவ்வணக்க மும் ஓங்கி ஒலித்தபோது, உணர்ச்சி களும் உணர்வுகளும் சோக இழையோ டிக் கொண்டிருந்தன. முந்தைய வாரத்தில் குரல் மட்டும் ஒலிக்கக் கேட்ட வர்கள் முகத்தைப் பாராத குறையோடு சென்றிருக்க, இன்று முகத்தைப் பார்க்க முடிந்தும் இனி எப்போதும் கேட்க முடியாத குரலுக்காக, பார்க்க முடியாத அவரது அசைவுக்காக, அனுபவிக்க முடியாத அவரது சிம்ம கர்ஜனைக்காக தாள மாட்டாத துயரம் பொங்கச் சூழ்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. உழைப்பாளி மக்களுக் காகவே அர்ப்பணித்துக் கொண்டி ருந்த பெருவாழ்வு நிறைவு பெற்றிருக்க வெறும் உடலாக அல்ல,
சமூக மாற்றத் திற்கான நம்பிக்கையின் உணர்வுமிக்க உருவகமாகவே உறைந்திருந்தார் கண்ணாடிப் பெட்டிக்குள்! கால மானார் என்பதல்ல, கால காலத்திற்கும் உன்னத தத்துவத்தின் மூலமானார், தோழர் என்.சங்கரய்யா. மறைவுச் செய்தியறிந்து தத்தமது குடும்பங்களின் ஆக மூத்த மனி தரைப் பறிகொடுத்த பரிதவிப்போடு சூழத் தொடங்கி இருந்தனர். இரவெல் லாம் வந்து வந்து சென்றவர்கள், அங்கி ருந்து வெளியேறவே விருப்பமின்றி உலவிக் கொண்டிருந்தவர்கள், தொலைதூரத்திலிருந்து எப்படி யெப்படியோ ஓடிப்பிடித்து வியாழக் கிழமை காலையிலிருந்து வரத் தொடங்கி இருந்தவர்கள் என அனை வரது கண்களும் அவரது உடலைத் துயரத்தோடு பார்த்துக் கொண்டிருந்தா லும், காதுகளில் அவரது குரல் ஒலிக்கக் கேட்டுக் கொண்டே நகர்ந்த மாதிரி இருந்தது. வானிலை எச்சரிக்கையை எல்லாம் மீறி இயற்கை, மழைக்கு இடை வேளை விட்டிருந்தது. மனிதத் திரள் எல்லாத் திசைகளில் இருந்தும் சென்னை நோக்கி வந்திருக்க, ஒரு மாம னிதருக்கான வழியனுப்புதலை மாநக ரம் அசந்து போய்ப் பார்த்திருந்தது. சுரண்டலுக்கு எதிரான மாற்றுக் கொள்கையை ஓயாது உரைத்துக் கொண்டிருந்தவர் நினைவாக மாற்றுத் திறனாளிகள் இணைந்திருந்தனர் அவ ரது இறுதி யாத்திரையில். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மாணவப் பருவத்திலேயே விடுதலை முழக்கமிட்ட தீரர் நடந்த நடையின் நினைவாக இளம் செம்படையினர் நடந்தனர் கம்பீரமாக அணிவகுத்து!
மகாகவி பாரதி, பாவேந்தர் பாரதிதாசன், மக் கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிதைகளில் ஆழ்ந்து பாலின சமத்துவத்திற் கான குரலெடுத்த சங்கரய்யாவின் சிலிர்ப்போடு நடந்தனர் ஜனநாயக மாதர் சங்கத் தோழர்கள். கீழ வெண்மணியில் சுடர் எடுத்துக் கொடுத்து அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டுக்கு வழி யனுப்பி வைத்த தங்கள் தலைவர் நினைவாகத் திரண்டிருந்தனர் விவசாயிகள் மற்றும் விவ சாயத் தொழிலாளர் இயக்கத் தோழர்கள். தீண்டா மைக்கு எதிராக, சாதிய இழிவுக்கெல்லாம் எதி ராகக் காலமெல்லாம் களத்தில் கனன்று நின்ற மாவீரர் நினைவாக, இன்னும் முற்போக்குக் கலை இலக்கியப் படைப்புகள் புரட்சிகர சமூக மாற்றத் திற்கு வித்திடும் என்று இடையறாது இலக்கிய நெஞ்சங்களுக்கு ஊக்கமூட்டிக் கொண்டிருந்த வரின் நினைவாக, வர்க்கப் புரட்சியை முன்னெ டுக்க வேண்டிய உழைப்பாளிகள் விடுதலைக்காக முழக்கமிட்ட தலைவரின் நினைவாக அவரது நடை யை நெஞ்சில் சுமந்து நடந்தனர் பெசன்ட் நகர் மின் மயானம் நோக்கி பல்லாயிரக்கணக்கான தோழர்கள். கட்சிக்கு அப்பாற்பட்ட உள்ளங்க ளும் தான்.
மிகுந்த உணர்ச்சிகரச் சூழலில் நெருக்கமாக எண்ணற்றோர் நிறைந்திருக்கும்போதும் பெருங்கட்டுப்பாட்டோடு இயங்கும் இயக்கம் செங்கொடி இயக்கம் என்பதை மீண்டும் மெய்ப்பிக்கும் வாய்ப்பையும், தனது மறை வுக்குப் பிறகும் சாதித்திருந்த அந்த எளிய மனி தரின் வலிமை மிக்க பணிகளை இரங்கல் கூட்டத்தில் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த னர் தலைவர்கள். இன்னொரு புறம் அரசு மரி யாதைக்காகச் சீருடையில் காவல்துறையினர் துப்பாக்கிகளோடு அணிவகுத்து நின்றிருந்தனர். தங்கள் இளம் வயதிலிருந்தே அவரை அருகி ருந்து திரும்பத் திரும்பப் பார்த்துக் கேட்டு லயித்து நெகிழ்ந்து போயிருந்தவர்கள், தங்கள் திருமணத்தை அவர் தலைமையில் நடத்திக் கொண்டிருந்தவர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு அவர் பெயர் சூட்டும் வாய்ப்பு பெற்றிருந்தவர்கள், எப்போது பார்த்தாலும் தனிப்பட்ட விசாரிப்பின் சுகத்தை அவரிடம் அனுபவித்திருந்தவர்கள், அவர் தலைமையில் பணியாற்றி இருந்தவர்கள், அவர் பாராட்ட இயங்கி இருந்தவர்கள், அவரது வழிகாட்டுதலில் தங்களைச் செம்மைப் படுத்திக் கொண்டிருந்தவர்கள், அவர் இன்னுமின்னும் உள்ளாக நின்று வழி நடத்துவார் என்ற நம்பிக்கை யில் ததும்பிக் கொண்டிருந்தவர்கள், அவரோடு இன்னும் பழகி இருக்காமல் போனோமே என்று ஆதங்கப் பட்டவர்கள் என்று எத்தனையோ வடி வங்களில் நிறைந்திருந்தது பெருங்கூட்டம். பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது நினைவுகள் பெருங்கடலாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. ஒரு புயலாக சீறிக்கொண்டி ருந்தது. அவரிருக்கும் மேடையில் எப்போதும் அவ ரது முழக்கமே நிறைவாக ஒலிக்கும். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எப்போதும் அவரது முழக்கமே வானைப் பிளக்கும். அவரை வழி யனுப்பும் நேரத்தில், அவரது முழக்கத்தை அப்ப டியே எதிரொலிக்க இயலாவிட்டாலும், அந்த உணர்வின் குறியீடாகக் குண்டுகள் முழங்கட்டும் என்பதாக மும்முறை முழங்கியது 30 குண்டு களின் சத்தம். தோழர் சங்கரய்யா அவர்களது குரலைக் கால காலமாகக் கேட்டிருந்த செவிகளுக்குள், அது சங்கரய்யாவின் முழக்கமாகவே எதிரொலித்தது.