tamilnadu

img

காலந்தோறும் கைகோர்க்கும் ஜீவி கவிதைகள் - காசாவயல் கண்ணன்

கவிதை தளத்தில் எத்தனையோ கவிதைகள் அரும்பிய வண்ணம் இருக்கின்ற போதிலும். சில கவிதைகள் தான் கவிஞனுக்கான அடையாளமாய் காலக் கண் ணாடியில் ஒளிர்ந்து கொண்டேயிருக்கின்றன  அப்படி கவிஞர் ஜீவியை நெடுங்காலமாக நமக்கு காட்டிக்கொண்டிருக்கும் ஒரு கவிதை சுட்ட அப்பளம் சுற்றிலும் பருக்கைகள் பட்டினி ராத்திரி.

ஆனா.. என்ற ஹைக்கூ தொகுப்பை அகநி பதிப்பக நண்பர் கவிஞர் மு.முருகேஷ் வெளியிட்டிருக்கிறார். வெகுசமீபத்தில் தான் இந்த தொகுப்பை நான் கண்ணுற்றேன். அறு பத்து நான்கு பக்கங்கள் கொண்ட தொகுப்பை ஒரே மூச்சில் வாசித்து முடித்து விட்டேன். ஆனால் ஜீவியின் ஒவ்வொரு மூன்று வரி யும் நிறைய இடங்களுக்கு கைகோர்த்து அழைத்துப் போகிறது அவரைப் போலவே.. செல்லுக்கு சார்ஜ் இல்லையென்றால் பவர் பேங்க் பயன்படுத்துவோம். ஜீவியின் இயல்பு மாறாமல் கவிதைகளும் நமக்கு எனர்ஜி ஏற்று கின்றன. நான் இவரை நடமாடும் மல்டி விட்ட மின் என்றே எண்ணுவேன். இவர் எழுதுவதை விட பிறரை எழுத வைப்பதில் குறியாக இருப் பார்.  தொகுப்பில் என்னைக் கவர்ந்த கவிதை களை பகிர்ந்து கொள்கின்றேன். கவலைகளும் அவலங்களும் நிரந்தர மில்லை. நாம் அகல் ஏற்றிட அவை அகலும் என்கிறார் பாருங்கள்...

அடர் இருள் 
ஒரு அகல் 
இனி பகல்

தொடர்ந்து முயற்சிகள் தோல்வியைத் தழுவினாலும் அடர்ந்த சோகத்தோடு இருக்க வேண்டியதில்லை முயற்சி வலை பின்னச் சொல்கிறார்.

அறுந்த வலை ஏறும் சிலந்தி வகுப்பெடுக்கும் மனசுக்கு.  சாயத் தொழிற்சாலைக்கு வேலைக்குப் போகும்  அவள் விதவை ஓட்டலில் கூட்டம் ஒரே விருந்து தொழிலாளிக்குப் பட்டினி

எனும் கவிதைகளில் வாழ்க்கை முரண்பாடு களை கவிதை முரணாக்கித் தருகிறார். மரணம் ஏற்படுத்தும் வலியை மறுக்கவோ மறக்கவோ முடியுமா என்ன.? புன்னகையுடன் வரவேற்பு எப்படிச் சொல்ல புருசன் இறந்ததை அவளிடம்.  வாசிக்கையில் வலிக்கிறது மனசு.  சாமானியனின் வாழ்வாதாரம் கவலைக்கிட மாகிட காரணமான விலைவாசியையையும் விட்டு வைக்கவில்லை  வாங்க முடியாது எதையும் வாசிக்க மட்டுமே விலைவாசி. 

இறந்த காலத்தின் ஈர நினைவுகள் நிகழ்கால வெயிலிலும் காய்ந்து விடுவதில்லைதானே அதை இப்படிச் சொல்கிறார்: பழைய டைரியின் மக்கிய நெடி ஒன்றில் மட்டும் மல்லிகை வாசம் உன் கூந்தல் பூ ஞாபக அறைகளில்  எரியும் ஊதுவத்தி உன் நினைவுகள்

உன் கூந்தல் பூ
ஞாபக அறைகளில் 
எரியும் ஊதுவத்தி
உன் நினைவுகள்

மனதை ஈர்க்கும் வரிகளே கவிதைகளாய் நிறைய இடங்களில். தொகுப்பு முழுக்க முற்போக்கு சிந்தைனை களை தன் பாணியில் வெளிக்காட்டி இருக்கும் ஜீவியின் இந்த வரிகள் யுக இருட்டை விரட்ட வெளிச்சம் கொடுக்கும் தீயின் சிவப்பு சமூக வெளியெங்கும் விரவிக் கிடக்கின்ற ஆதிக்க இருட்டை விரட்டவிடியல் கிழக்காய் இப்போதைய தேவை சிவப்பெனச் சொல்கி றார். “வானம் தொலைந்திட வில்லை” எனத் தொடங்கி கவிதைகளில் “அசுர சாதகம்” செய்து வரும் கவிஞர் ஜீவியின் ”ஆனா” ஹைக்கூ தொகுப்பு தமிழ் கூறும் நல்லுல கிற்கு கிடைத்த அவரின் பொக்கிஷம். தொடரும் அவரது கவிதை முயற்சிகள் பல பரிணாமங்ளோடு நம்மை மகிழ்விக்கும் என்ற நம்பிக்கைளோடு வாழ்த்துக்களை தெரி விக்கின்றேன்.